Translate Tamil to any languages.

சனி, 29 அக்டோபர், 2016

வானம் அழுவதால் தான் மழை!


புகை தள்ளும் உருளிகளின் கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
தரை வெளியில் வீசுகின்ற கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
சுமை தாங்க முடியாத வானம் அழுகிறதோ! - அதை
கண்டு பொறுக்க முடியாத பகலவன் தான்
வெயில் எறிக்க வைச்சு உறிஞ்சுவதால் தான்
உலகம் எங்கும் மழை இல்லையோ - சிலவேளை
பகலவன் ஓய்வுக்குச் செல்வதால் தான் - வானமழ
உலகம் எங்கும் மழை வெள்ளமோ?  - இயற்கையை
வெட்டி வீழ்த்தும் நம்ம ஆளுங்க
சூழலை அழுக்காக்கும் நம்ம ஆளுங்க
இயற்கையை இயல்பாகப் பேண உதவினால்
இயற்கையும் இயல்பாக இயங்கும் என்பேன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!