Translate Tamil to any languages.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

தென்றல்காற்று உன்னை உரசும் வேளை


முரளி சொன்னால் புரளி கிடையாது
முழுக்க உண்மை தான் தனபாலா!
மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்
பதிவர்களின் உள்ளம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது...
தென்றல்காற்று உன்னை உரசும் வேளை
பதிவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர்...
திண்டுக்கல் தனபாலன் வரவின்றி - 2016 இல்
தமிழகத்தில் பதிவர் திருவிழா நடக்காதாம்...
திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டம் இன்றி
உலகத் தமிழ் வலைப்பூக்கள் அழுகின்றன...
வலைத் தொழில்நுட்ப வழிகாட்டியே - உன்
வருகை இன்றி வாடி நிற்பது - சிறந்த
குறள், பாட்டு, படம் கலந்த - உந்தன்
கலக்கல் பதிவை நம்பிய வாசகர்களுமே...
சாண் ஏற முளம் சறுக்க வைக்கும்
சேற்றுவழி பயணிப்பது தான் வாழ்க்கை - அந்த
வாழ்க்கையில் தடங்கல் என்றால் - உனக்கு
உதவிட நட்புகள் நிறையவே உள்ளன...
மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட
பதிவர்களின் உள்ளங்களை எண்ணி - தங்கள்
எண்ணத்தில் மாற்றம் வரவேணும் - அதனால்
முகநூல் சென்றோரும் வலைப்பக்கம் வரணும்
உலகத் தமிழ் வலையுலகம் உயிர்பெற
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வரவு
காலத்தின் தேவை என்பேன் - இது
முரளிதரனின் பதிவிற்கு விளம்பரமல்ல - இது
முரளி சொன்ன பதிவர்களின் எதிர்பார்ப்பை
நானும் உறுதிப்படுத்த உரைக்கின்ற கருத்தே!
வீசும் மூங்கில்காற்றைத் திருப்பி விடுகிறேன்;
அன்பு அன்பரே!
திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்
அன்புடன் உந்தன் வரவை எதிர்நோக்கும் வலைப்பூ நண்பர்கள்! 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!