Translate Tamil to any languages.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

கடவுளே! கண் திறந்து பாராயோ!


மழை வந்து நனைத்துச் செல்ல
வானம் அழுது மழை விழுது என
பள்ளியில் படித்ததை நினைப்போமே!
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் ஆங்கே சேருமாம்
என்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!
சென்னைக்குக் கொட்டிய மழைநீர்
கடலுக்கும் ஆங்கே சேராமால்
தடுப்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!

ஊருக்குள்ளே மழையைக் கொட்டி
முட்டியோடும் வெள்ளம் கண்டு
ஊராளுகள் - அவ்வெள்ளத்தை
கடலுக்குள்ளே ஓட்டிவிடக் கற்றிட
அரையடி வெள்ளம் போதாதா கடவுளே!
"வெள்ளம் வருமுன் அணை போடு" என்றோ
"வேளாண்மைக்கு மிஞ்சிய வெள்ளம் கண்டு
ஓட்ட வேண்டும் கடலில் விழுந்தோட..." என்றோ
கடவுளே! - நீ... நீ... நீ...
சொல்லிக் கொடுக்க விரும்பி இருந்தால்
இழப்புகள் ஏதுமின்றியே உணர்த்தி இருக்கலாமே!

கடலூரில் தொட்டு சென்னை வரை
இடுப்புக்கு மேலே தலைக்கு மேலே
மழையைக் கொட்டி வெள்ளம் பெருக்கி
ஆங்காங்கே ஊர்கள் வெள்ளத்தில் மூழ்க
கடவுளே! - நீ... நீ... நீ...
வந்திங்கே வாழ்ந்து பார்த்தால் காண்பீர்
தமிழர் வாழ்வையே அழிக்கும் வெள்ளத்தையே!
ஈழவரின் தொப்புள்கொடி உறவுகளாம்
தமிழக மக்களின் வாழ்வைச் சீரழித்து
வேடிக்கை பார்க்கும் கடவுளே! - உன்
திருவிளையாடலுக்கு எல்லையே இல்லையா?

தமிழக மக்களின் வாழ்வைக் கொஞ்சம்
கடவுளே! கண் திறந்து பாராயோ! - நீ
படைத்த உயிர்களின் வாழ்வை மீட்டிட - உன்
திருவிளையாடலைத் தான் நிறுத்தாயோ!
இல்லையேல் - கடவுளே!
உன்னை நினைக்க எவரிருப்பார் இங்கே!
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

குறிப்பு: 2015 கார்த்திகை - மார்கழி காலத்தில் கொட்டிய அடைமழையால் துயருறும் தமிழக உறவுகளை எண்ணிப் புனைந்த பதிவிது. தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஈழத் தமிழருடன் உங்கள் யாழ்பாவாணனும் கடவுளை வேண்டி நிற்கின்றார்.


19 கருத்துகள் :

  1. தமிழக மக்களின் துயர் தீர்க்க அந்தக் கடவுள் தானே தான் இறங்கிவந்து மீட்புப் பணியை செய்யவேண்டுமோ என தோன்றுகிறது . மனித முயற்சிக்கும் அப்பாற்பட்டதாகத்தான் தோன்றுகிறது வருண பகவானின் திருவிளையாடல் சென்னயில் தவிக்கும் மக்களின் துயர்கண்டு மீளாதுக்கத்தில் தான் அண்டை மானிலங்களும் துயருகின்றன. ஆனால் கடவுள் தான் கண் திறக்க வேண்டும். விடாது பிரார்த்திப்போம். கூட்டுப்பிரார்த்தனைக்கு என்றுமே பலன் உண்டு என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே தங்களின் கடவுளுக்கு கொடுத்த விண்ணப்ப கவி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  3. திக்கற்றோருக்கு தெய்வமே துணை என்றபடி, உங்களது உருக்கமான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  4. ஆட்சியாளர்களிடம் கொடுத்த மனுவுக்கே பதில் கிடைக்காத போது இல்லாதகடவுளிடம் மனு செய்து பதில் வந்தால் தங்கள் அதிர்ஷ்டம்தான்...

    பதிலளிநீக்கு
  5. Man with his pea nut brain thinks that he can over take nature.The political environment all over the world is highly corrupt and selfish.The nature once a while will certainly corrects its course.If you have concience(which ofcourse is there but covered) and take its guidence nothing will go wrong.
    Thanks for your prayer.

    பதிலளிநீக்கு
  6. கஷ்டங்கள் சீக்கிரம் தீர, கடவுளே அருள் செய்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    அனைவருக்கும் தெய்வம் துணை. மனதை நெருடும் கவிதை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  8. ஐயா வணக்கம். இயற்கையைப் பகைத்தால் இயற்கை நம்மை ஆட்டிப்படைத்து விடும் என்பதை இன்று அனைவரும் அறிந்து கொண்டனர். இனியேனும் இயற்கையை அழிக்காமல் வாழ உறுதி ஏற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  10. இயல்பு நிலை திரும்பும் நாளுக்காகக் காத்திருக்கிறோம், உங்களுடன் நாங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு
  11. அருமை ஐயா, நெகிழ்வாய் இருக்கிறது ..
    கடவுளைக் கேட்பது சரிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானிலிருந்து - கடவுள்
      தன் திருவிளையாடலைக் காட்ட
      தரையிலிருந்து - மக்கள்
      துயருறும் நிலை தொடராமலிருக்க
      கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

      போதும் போதும் கடவுளே! - உன்
      திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!