Translate Tamil to any languages.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நடாத்துவதாக 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் அறிவித்திருக்கிறது. "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்பது அப்போட்டியின் தலைப்பு. 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்றும் 'ஊற்று' குழுவினர் தெரிவித்துள்ளனர். பதிவர்கள் எல்லோரும் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அதற்குப் பின்னூக்கமாகப் பாப்புனைய விரும்பவைக்கலாம் என இப்பதிவைத் தர முயன்று பார்க்கிறேன்.

சரி! இப்போட்டியின் தலைப்புப் பற்றி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் குறித்து இத்தலைப்பை இட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். எல்லாம் தெரிந்த பின்னும் பா/கவிதை புனைந்து போட்டியில் பங்கெடுக்கப் பின்னடிப்பது நல்லதல்ல.

வெறுமனே தலைப்பைத் தந்திருந்தால் பா/கவிதை புனைவதென்பது சற்றுச் சிக்கல் தான். தலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே! ஆயினும் போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றேன். இனியாவது உங்களால் பா/கவிதை புனைய முடியாதா? எடுத்துக்காட்டுக்காக 'செருப்படி' என்ற தலைப்பில் பா/கவிதை புனைந்து பார்க்கலாம் வாங்க!

"கண்டேன் கண்ணகி ஒருத்தியை
கண்ணில் நுழைந்தவள் - என்
உள்ளத்தில் குந்தியிருக்க - அவளை
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தான் பிள்ளைகுட்டிக்காரி' என்று
தருவாளே செருப்படி!" என்றவாறு
தலைப்பை மட்டும் கருத்தில் கொண்டோர் பா/கவிதை புனைய முயலலாம்.

"முத்துப்பல் சிரிப்பு அழகி
எந்தன் முன்னே நெருங்க
உந்தும் உள்ளத்து உணர்வால்
நெருங்கி வந்தவளை நோக்கி
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தன் கணவனைக் காதலிப்பதாய்' கூறி
கன்னம் (சொத்தை) கிழிந்து செந்நீர் (குருதி/ இரத்தம்) வடிய
குதிக்கால் பாதணியால் கொடுத்தாளே
'எவளையும் விரும்பாதே!' எனச் செருப்படி!" என்றவாறு
பட்டறிவை (சூழலை/அனுபவத்தை) வைத்து பா/கவிதை புனைய முயலலாம்.

இந்த எடுத்துக்காட்டில் 'இப்படியும் நிகழலாம்' என முதலாவதும் 'இப்படி நிகழ்ந்தது' என இரண்டாவதிலும் வெளிக்கொணர முயன்றிருப்பதைக் காணலாம். அப்படியாயின் "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்ற தலைப்பில் எப்படி பா/கவிதை புனைந்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் 2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அனுப்பவுள்ளீர்கள்?

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா? அப்படி ஒருபோதும் இருக்காதே!

கருங்கல்லைத் துளைத்தேனும் அதற்கப்பால்
என்ன, எப்படி என்றவாறு
புனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்
பாவலர்/கவிஞர் என்பவரின் உள்ளத்தில்
இயல்பாகத் தோன்றும் என்றால்
நம்மால் முடியாதென இருக்கலாமோ?
கண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே
கண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே
உண்மையில் பாப்புனைய விரும்பும்
உம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே!
உலகெங்கும் உடனுக்குடன் உறுமிய
ஊடகங்களின் தகவலை வைத்தே
ஒரு முறை உண்மை நிகழ்வை
உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே
உங்களைப் பாதிப்புக்கு உள்ளானவராக
எண்ணிக் கொண்டே - எதிரே
உதவிக்கு வந்த உண்மைக் கைகளை
அவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)
பாவாக/ கவிதையாக புனைய இயலுமே!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் எல்லோரும் பங்கெடுக்கலாம்; 'வாருங்கள்! வாருங்கள்!' என எல்லோரையும் அன்போடு அழைக்கின்றேன். கீழுள்ள இணைப்பையோ படத்தையோ சொடுக்கிப் போட்டி பற்றிய முழு விரிப்பையும் படித்த பின் போட்டியில் பங்கெடுக்கலாம் வாருங்கள்!
நீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள்! கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.

<a href="http://ootru1.blogspot.com/2015/12/2016.html" target="_blank"> <img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF0dx_jmVjyoimoyqgiXhFVBVSuecy8ifWibaxUM6NJOAjSeKCwLKT3cVyw8GmgqLVf3Oquc7i1FBJTPtPleJ231BT1fEId03tNNUOUb4O_8NYbs5NrNV2Yc3FAwRsxc17GE_gWLHKkvA/s640/Untitled-1+copy.jpg" width="200" /> </a> உங்கள் தேவைக்கு ஏற்ப width="200" height="240" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.

9 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. போட்டியாளர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com

    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!