Translate Tamil to any languages.

வியாழன், 16 மே, 2013

அறிவுக்கண்ணால பாருங்க...



காதல் என்பது
யார் மீதும்
எந்நேரமும் வரலாம்
அந்நேரம்
மணமானவர்கள்
கணவனை / மனைவியை நினைவூட்டுங்க...
மணமாகாதவர்கள்
காதலனென்றால்
நல்ல வருவாய்க்காரனாகவும்
காதலியென்றால்
பணத்தைச் சேமிப்பவளாகவும்
பார்த்துக் கொள்ளுங்க...
காதல் வந்ததும்
கண்ணை மறைக்கும் என்கிறாங்க...
அதுங்க
அறிவுக் கண்ணைத் தானுங்க...
அதுதானுங்க
காதல் வந்ததால்
வரவேண்டிய அறிவைச் சொன்னேனுங்க!
நான் சொன்னா
நீங்க கேட்க மாட்டியளே...
இப்படித்தானுங்க
நாலு பிள்ளைக்காரனுங்க
நாலாம் பிள்ளையின் அகவையிலே
நாலு பிள்ளைகளை
பொழுதுபோக்காகக் காதலித்தானுங்க...
நடுச்சந்தியிலே காதலி நாலும்
ஒன்றாய்ச் சந்திக்கையிலே
ஒன்பது பெண்களிடம்
நாலு பிள்ளைகளைக்காரன்
நல்லாய் வேண்டிக்கட்டினானுங்க...
என்னங்க - நீங்க
தலையைச் சொறியிறதைப் பார்த்தால்
கணக்குப் புரியவில்லையோ
கணக்குப் பார்க்கத் தெரியாதோ
என்றெல்லோ
நான் நினைச்சேன்...
என்றாலும் சொல்லிவிடுகிறேன்
பொழுதுபோக்காகக் காதலித்த பெண்கள்
மனைவியின் நண்பர்களாம்...
அவரின் அந்த நாலு காதலிகளும்
மனைவியோட அவரும்
அவரோட நாலு பிள்ளைகளும்
சந்திச்சபோது தான்
அவரோட காதல் அரங்கேற
ஒன்பது பெண்களுமா
அவரை உதைத்துத் தள்ளிட்டங்கண்ணே!
ஓரறிவுக்கண்ணால
பின்விளைவைப் பார்க்காததாலே
பதினெட்டுக் கண்கள் பார்த்ததும்
போட்டுத் தள்ளிய கதையைவிட
இன்னொரு
சுவையான கதையைக் கேளுங்கண்ணே...
என்னையும் ஒருவள்
தனக்குள்ளே
என் மீது காதல் அரும்ப
"என்னைத் தான் காதலிப்பதாகவும்
நீங்க விரும்பினால்
உங்க மகனைக் கட்டிட்டு
உங்களுக்கு
மருமகளாயிடுவேன்" என்று
ஒருவருக்கும் தெரியாம
என் வீட்டை வந்து
என் இல்லாளிடம் கேட்க - அவளோ
அடுப்பில ஆட்டுக் கறிக்கு மூட்டிய
வேப்பந்தடி நெருப்புக் கொள்ளியால
"கண்ணில்லையாடி
என் கணவனையே காதலிப்பதாக
என்னட்டை வந்து கேட்க..." என்று
மூஞ்சியில சுட்டுக் கலைத்த கதை
நல்லாயிருந்ததண்ணே!
என் மனைவி
என்னை விட மொத்தம் தான்
ஆனால்,
என் மனைவிக்கு
நான் பிள்ளையாக இருக்கலாமென
நம்பிய பெண்ணுக்கு
அறிவுக்கண்ணில
ஏதும் பிழையிருக்கலாமண்ணே!
உப்பிடியான
கதைகளைப் பொறுக்கித் தானண்ணே
யாழ்பாவாணனனும் பா புனையிறானுங்க...
நானும்
உந்தக் கதைகளை வைத்து
"அறிவுக்கண்ணால பாருங்க..." என்று
தலைப்பிட்டு
பா புனையப் போறேனுங்க!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!