Translate Tamil to any languages.

வியாழன், 16 மே, 2013

அடே! யாழ்பாவாணா!


பெண்/ஆண் மீது காதல் கொண்டதால்
கிறுக்கிக் கொள்ளலாம்...
கவிதை வரலாம்...
பாவல(கவிஞ)ராக முடியாது
தோழர்களே! தோழிகளே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மால
பாவல(கவிஞ)ராக முடியாதென
நீ எப்படிச் சொல்வாயென
என்னையும் நீங்களும் கேட்கலாம்!
நானும் தான் கேட்கிறேன்
பெண்/ஆண் மீதான காதலைத் தவிர
வேறெதனையும் வைத்துக் கிறுக்கலாமே!
வேறெதுவா?
மின்மினிப் பூச்சி ஒளியில
வாழும் ஏழைக் குடிசையை...
ஒரு பிடி அன்னத்திற்கு
துடிதுடிக்கும் உள்ளங்களை...
பெண்களின் கண்களில் இருந்து
வடிகின்ற கண்ணீர்த் துளிகளை...
பிறந்த உடலாக
குடிச்சுப் போட்டு அலையும் ஆண்களை...
மேலைநாட்டு ஈர்ப்பில்
சேலைகளைப் பறக்கவிட்டும்
ஆணாடைகளை அணிந்து
மது(பியர்) குடித்தும்
பொன்னிலை(கோல்ட் லீவ்ப்) புகைத்தும்
உலாவும் இன்றைய குமரிகளை...
வாக்கு வேண்டும் வரை
மக்களுக்காக குளிர்களியாக(ஐஸ்கீறீம்) உருகி
தேர்தலில் வெற்றி பெற்றதும்
வாக்களித்த மக்களை மறந்து போய்
நாடாளுமன்ற நாற்காலி(கதிரை)யைத் துடைக்கும்
பை நிரம்பப் பணம் சுருட்டும்
அரசியல்வாதிகளை...
இறைதொண்டு செய்வதாய்
மறைவில் மங்கை சுகம் காணும்
இறைதொண்டர்களை...
இன்னும் இன்னும்
எத்தனையோ தலைப்புகள் இருக்கே!
மொத்தத்தில்
பாவல(கவிஞ)ன் என்பவர்
மக்களாய(சமூக) ஓட்டைகளுக்குள்
நடப்பவற்றை எழுதவேண்டியவரே!
காதலியையோ காதலனையோ
எண்ணி எண்ணிக் கிறுக்கும்
தலைவிகளே தலைவர்களே
பாவல(கவிஞ)ன் என்பவர்
கரும்கல்லுக்கப்பால் நிகழ்வதையும்
நாளை நடக்கக்கூடியதை இன்றும்
எண்ணி எண்ணிக் கிறுக்குபவரே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மாலையும்
பாவல(கவிஞ)ராக முடியுமென்போர்
உலகின் மூலைமுடுக்கெங்கும்
நடந்த, நடக்கும், நடக்கவுள்ள
உங்கள் உள்ளத்தை
தாக்கிய, நோகடிக்கும் எதையும்
எண்ணி எண்ணி எழுதுங்களேன்!
"பாவல(கவிஞ)ர் வாக்கு
பொய்த்ததில்லை" என்ற
உண்மையில் என்ன இருக்கும்
அவரது
தூரநோக்கு முடிவோ தீர்வோ தான் - அது
அவரையே
பாவல(கவிஞ)ர் என்று சாற்றுகிறதே!

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!