Translate Tamil to any languages.

வெள்ளி, 29 ஜூன், 2018

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 1


நான் தான்
அவளைத் தான் கேட்டேன்
"தாலி கட்ட விருப்பமா?" என்று - அவளோ
தோளைத் தட்டி "அண்ணன் போல இரு" என்றாளே!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"திருமணம் செய்வோமா?" என்று - அவளோ
"அப்பா போல இருக்கிறியளே!" என ஒதுங்கினாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"கலியாணம் கட்டுவோமா?" என்று - அவளோ
"தன்ர தம்பி போல இருக்கிறியே!" எனப் பறந்தாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"மணமுடிக்க விருப்பமா?" என்று - அவளோ
தன்ர கணவனைக் கேட்டுச் சொல்வதாக
போனவள் போனவள் தான்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
மணமுடிக்க விருப்பம் - ஆனால்
"தங்கள் விருப்பம் தான்..." என்னவென்றேன்!
"ஒழுங்காக உழைக்கத் தெரியவில்லை
என்னோட பிழைக்க விருப்பமோ?" என
"போடா! - உன்
முகத்தை கண்ணாடியில பாரடா" என
அவளும் ஓடி மறைந்தாள்!
எவளோ ஒருத்தி
என்னை நாடி வந்தாள் - நானும்
தலை, கால் தெரியாமல் தடுமாறினேன்!
என்ன உழைப்பு? வருவாய் எவ்வளவு?
என்றெல்லாம் கேட்ட பின்னே...
அழகி ஒருத்தி நானிருக்க
"தாலி கட்ட விருப்பமா?" என்று
என்ர அம்மாட்ட போய்க் கேட்கிறியே
உனக்குக் கலியாணப் பைத்தியம் பிடிச்சிருக்கா?
என்றெல்லோ சொல்லெறிந்து சென்றாளே!
இன்னொரு எவளோ ஒருத்தி
என்னை நாடி, ஓடி வந்தாள் - நானும்
தட்டுத் தடுமாறித் தரையில விழுந்திட்டேன்!
மொட்டைத் தலையிலே குட்டிப் போட்டு
சட்டென்று எழும்பென்றாள் - நானும்
"சனியன் வந்து பிடிச்சிட்டுதோ?" என
எப்பன் முயன்று எழும்பி நிற்க
"மணமுடிக்க விருப்பமா?" என்று
ஆளை ஆள் கேட்டால் - உன்னை
"பைத்தியம்" என்று
பறை தட்டிப் பரப்புவாங்களே! - இனி
நானிருக்க எவரையும் கேட்காதேயென
என் வீட்டுக்கு வந்திட்டாள் - அந்த
சனியன் போல கறுப்பி ஒருத்தி!

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2 என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2018/07/2.html



நான் தான் உலகில் பெரியவன்

உண்ணான ஓர் உண்மை - நானோ
மூன்றடி உயரமான சின்னப்பொடியன்
ஐம்பதாம் அகவையை நெருங்கிய - நானோ
அதிகம் படிக்காத சின்னப்பொடியன்
எனக்கும் - எந்தவொரு
அரசியல் கட்சிக்கும் உறவே இல்லை!
எனக்கும் - எந்தவொரு
அரசவெதிர்ப்புக் குழுவுக்கும் உறவே இல்லை!
என்றாலும் கூட - என்னை
இருபத்தி நான்கு மணி நேரமும்
அ - ஃ வரை புலனாய்வு செய்து
பரப்பித் திரிவோர் குறைந்தபடில்லை!
பிள்ளையாரிடம் முறையிட்டால்
"என்னை வழிபடத் தான்
ஆளில்லாத வேளையிலும் - உன்னை
இழிவுபடுத்திப் பரப்பித் திரிவோர்
நாடெங்கும் இருப்பதால் பாரும் - நீயே
உலகில் பெரியவன்" என்று பதிலளிக்கிறாரே!

*ஒருவரை நாம் இழிவுபடுத்திப் பரப்பினாலும் அவர் புகழடைகிறாரென்று அறியாதவர்களுக்காகப் புனைந்த பாவிது.




சாவு நாள் தெரியாதே!

எனக்கும் சாவு உண்டு - அந்த
எனது சாவு நாளை அறிய
உயிர் பறிக்கும் இயமனின் கணக்காளர்
சித்திரபுத்திரனாரின் கணக்கேட்டைப் பார்க்கவும்!
நானறிந்த வரை ஒன்றுண்டு
பிறப்பும் இறப்பும் எந்நாளென
கண்டறிய எவராலும் முடியாது என்பதே!
நான் என்றைக்கோ சாவடைந்தாலும் கூட
நான் வைத்த அன்பும் பற்றும்
உங்கள் நினைவுகளில் வரலாம்
ஆதலால், நான்
உங்களோடு தான் வாழ்ந்துகொண்டிருப்பேன்!
ஆகையால்,
அன்போடும் பற்றோடும் பழகிய உறவை
பண்போடும் பணிவோடும் பேணுவோம் வாங்க!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!