Translate Tamil to any languages.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

சுடச் சுடக் கவிதை தாருங்கள்...?


இலங்கையில் அவிசாவளையில் நடந்ததாக
முகநூலில் தென்பட்ட தகவற்படி
தனது காதலி
"நீ போய் சாவு!" எனக் கூறியமையினால்,
நகரப்பகுதியில்
தனது உடலில் தீ வைத்து எரியும்
இளைஞரைப் பாரும்...!

இச்செய்தியைக் கருத்திற்கொண்டு
"தோன்றிய எண்ணங்களைத் தொகுத்தே
"காதல்" எனும் சொல்லைச் சுட்டியே
ஆணோ பெண்ணோ
தற்கொலை செய்வதை நிறுத்துங்கோ" என
உரைக்கும் சிறந்த கவிதைகளை - அதுவும்
முதல் நூறு கவிதைகளை
மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!

தற்கொலைக்குச் செல்லாது
வாழ வழிகாட்டும் கவிதைகளே
இன்றைய தேவை என்பதால் - இந்த
மின்நூலாக்கும் பணிக்கு - உங்கள்
பாவண்ணங்களைக் கருத்துகளாகப் பகிருங்கள்!

கவிதைகள் யாவும் பின்னூட்டங்களாகவே தரப்பட வேண்டும். அதாவது இப்பதிவுக்கான கருத்துகளாகவே தரப்பட வேண்டும். இப்பதிவுக்குப் பின்னூட்டமாகவோ கருத்தாகவோ கிடைத்த முதல் நூறு கவிதைகளை மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!
என்றவாறு

"பட்டங்கள் இல்லையேல்
பாவண்ணங்கள் கிட்டாதோ
எங்கே - உங்கள்
பாவண்ணங்களைக் காட்டக்கூடாதோ?" என்று
முகநூலில் (Fcebook இல்) அறிவிப்புச் செய்த வேளை
ஐந்தாறு கவிதைகளே வந்து சேர்ந்தன!

1-என் கவிதை

வலிந்து முயன்று - நீயும்
காதலிக்க முனைவதும் தவறு!
காதலாக மலரும் உறவை
ஏற்காமல் இருப்பதும் தவறு!
காதலித்த பின் பிரிய நினைப்பதும்
நம்மாளுங்க இயல்பு என்றாலும்
பிரிவைத் தாங்க இயலாது
தற்கொலைக்குச் செல்வதும் தவறு!
ஒன்றில்லை என்றால் இன்னொன்று
என்றென்றும் உனக்கு இருக்கென்று
வாழ்க்கையைச் சுவைக்கத் துணிவின்றி
தற்கொலையை நாடுவதும் தவறு!
தற்கொலையை நாடாமல் - என்றும்
வாழ்ந்து காட்டத் துணிந்தவரே
மாற்றாருக்கு வழிகாட்டி என்பேன்!

2- Vetha Langathilakam உன் பிறவி அரியது!

காதல் உன்னையும் மீறிநெஞ்சில்
ஆழப்பதிந்தால் இறுகப் பற்று!
நீளத் தொடர்!...உன் காதலை!
அன்றேல் விலகிச் செல்!
ஆழக் காதலைத் தேடு!...

அருமை மானுடப் பிறவி!
தற்கொலை என்ற பெயரால்
உன்னை அழிக்காதே!....
யார் தந்தது இந்த உரிமை!
பெற்றவர் தந்த உடலன்றோ இது!

எங்கிருந்து வந்தது உன்னையழிக்கும்
இந்த உரிமை! தூர நட.!..
நண்பர்களைத் தேடு!
கடலில் மீன்கள் போல உலகில்
ஆயிரம் பெண்கள்!...உன்னவளைத் தேடு!


வாழவழி செய்க காதலே
வீழ குழி செய்திடலாமோ?
பயிர்போல் செழிக்கும் காதலே
உயிர் அழிப்பது அறமும் ஆகுமோ?

இருமணம் இணைந்த திருமணம் வேண்டின்
பொறுமனமே! நல்வினை நாளும் வேண்டி!
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலப்பதுவே காதல்

நெருப்பை நெருங்கும் முன் - நெஞ்சே
பொறுப்பை நினைவில் கொள்
சுடர் சுட்டெரித்து காயம் கரியாகும்
அறியா காதல் அஹிம்சை ஆகா!

ஒரு நிமிட பைத்தியமே - தேவை
நல் நம்பிக்கை வைத்தியமே!
-புதுவை வேலு

4-  Sriram Balasubramaniam
 ​
​மனதில் இருக்க வேண்டிய
காதல் தீயை
தனது உடலில்
ஏற்றுக் கொண்ட
இவன்
போனதே நலம்.
இல்லா விட்டால்
தினம் தினம்
இவன் நா
அவளைச்
'சுட்டு'க்கொண்டே இருந்திருக்கும்.


அவனைப் பற்றவைத்தது
காதல் தீ!

6- Govind Dhanda (சுஷ்ரூவா)
உதிரத்தை அளித்தவள்
வயிற்றில் வைத்த தீ
உன் உடல் பற்றிய
பாதகியின் அதரத் தீ

தீயின் நாக்கிற்கு
ருசி அளித்தவனே
தீராப் பாவத்தை.....
காதலுக்கெனத் தந்தவனே
தீர வேண்டும் இத்துடன்.

காதல்.....
மறுத்தால் சாதலா முடிவு?
காதல்....
மறுக்க எதிர்த்து எழுதலே
உனக்கு மட்டுமல்ல
காதலுக்கும் வாழ்வு

உணவிற்கு.....
காத்திருக்கும் கயவனே
உணர்விற்கு....
பலியாகும் பாதகரே!
காதலின் பொருளறியாது
காதல் பறறிப் பேசாதீர்!

காதல்.....
மலரினும் மென்மையானது
காதல்....
மதுவினும் இனிமையானது
காதல்.....
தென்றலினும் சுகமானது
காதல்! காதல்! காதல்!
சொல்லச் சொல்லச் சுவையானது!

மறுப்பினால் வெறுப்பது வீண்
மறுபடியும் பிறக்குமேத் தேனென
மாறாக் காதலின் மகிமையது
மானிடம் அறிவது கடினமோ?!

தீ நாக்கிற்கு ஆகுதியானவனே
நீயே காதலுக்குத் தீங்கானவன்
தீ உனைத் தீண்டினாலும்
நீ தீண்டியது தீ ஆனாலும்
அவமானம் காதலுக்கே!


மேற்படி மின்நூல் வெளியிடத் தங்கள் கவிதைகளைப் பின்னூட்டமாகத் தருக.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!