Translate Tamil to any languages.

ஞாயிறு, 9 ஜூலை, 2017

4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி?

உங்கள் யாழ்பாவாணன், இந்தப் பதிவினூடாகத் தன்னைப் பொறுக்கி என்று காண்பிக்கின்றார். எல்லாம் நம்ம நீண்ட ஆயுளுக்காக, யாழ்பாவாணன் கூறாத உள/உடல் நல மதியுரை தானே! அவருக்குப் பதிவெழுதச் சரக்கில்லையோ நேரமில்லையோ பொறுக்கித் தொகுத்தைப் படித்துப் பார்ப்போமா!

சமிபாடு (செரிமானம்) பற்றி அறிஞர்கள் கருத்து:

திருவள்ளுவரின் குறள்வெண்பா:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள்: 942)

கலைஞர் மு.கருணாநிதி உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
(http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html என்ற தளத்தில் பொறுக்கியது)

அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஒருவரது அகவை (வயது) என்ன என்பதைப் பொறுத்து, அவர்களுக்கு இருக்க வேண்டிய தூக்கம் பற்றி விரித்துரைப்பதைக் காண்போம்.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை):
புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.

குழந்தைகள் (4 முதல் 11 மாதம் வரை):
தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை):
தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும். ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை):
தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை):
ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை):
பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை):
தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை):
மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்):
ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.
(http://www.bbc.com/tamil/science/2015/02/150211_sleep என்ற தளத்தில் பொறுக்கியது)

இன்றைய முன்னணி நகைச்சுவை வலைப்பூவில்
(http://www.jokkaali.in/2017/04/blog-post_10.html)


'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)
           ''என்னங்க, அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார்?''
         ''பசியும் , ஃபிரிட்ஜ்  பல்பும் ஒண்ணு ... கதவைத் திறந்தா  மட்டும் பல்பு எரியுற மாதிரி, பசிச்சா மட்டும் தான் சாப்பிடணும்னு சொன்னாரே!''

எந்த நகைச்சுவையும் சிந்திக்க வைச்ச பின் சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.
இந்த நகைச்சுவையும் சற்று எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்குமே!
அந்த வகையில் என் உள்ளத்தில் எழுந்த சிந்தனையைப் பின்னூட்டமாக வழங்கி இருந்தேன். இதோ...

''பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு... கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி, பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே!'' என மனோ தத்துவ டாக்டர் சொன்னது சரி தானே!

உண்டது உள்ளே (வாயூடாக வயிற்றுக்குள்ளே) போய் சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நான்கு மணி நேரம் தேவை. 'நொறுக்குத் தீனி' என்றாலும் நான்கு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாமே!

'பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் மாதிரி என்றால் 'நொறுக்குத் தீனி' என வடை, பச்சி, அப்பம் என்றவாறு வயிறு முட்ட உண்பதில்லை. 'நொறுக்குத் தீனி' எனக் கொஞ்சம் மிக்சர் அல்லது கொஞ்சம் கச்சான் கொறிக்கலாம்.

அடேங்கப்பா! நள்ளிரவிலும் நொறுக்குத் தீனியா? அப்ப தூக்கம் (நித்திரை) என்னவாகும்? ஆறு தொடக்கம் எட்டு மணி நேர தூக்கம் (நித்திரை) பேணவிட்டால் உங்கள் ஆயுள் கெட்டுப் போகலாம்.

உணவு சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நேரம் கொடுத்து உண்டால் நீண்ட ஆயுள்!

"நாலும் எட்டும் ஆரோக்கியத்துக்கு உறுதி எனலாமோ :)" என வலைப்பூ ஆசிரியர் தன் எண்ணத்தைப் பதிலாகத் தந்திருந்தார்.

என்னங்க! யாழ்பாவாணன் பொறுக்கிப் பகிர்ந்ததில் ஏதாச்சும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமாகப் பகிருங்களேன்.

முதலில "வயிறுமுட்ட உண்டாலும் பட்டென்று தூக்கம் வருமே! அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ! இந்தத் தூக்கம் நன்றன்று. உண்ட பின் நான்கு மணி நேரம் கழித்து உண்டாலும் வயிறுக்குள்ளே சமிபாடடைய உடற்பயிற்சி (உடலிழைக்க வேலை செய்யலாம்) தேவை. அப்படியாயின் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இந்தத் தூக்கம் நன்று." என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிருகிறேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!