வாழ்க்கை என்னும்
ஊரிலே
காதலர் சந்திக்கும்
தெருவிலே
அரும்பிய காதலும்
தோல்வியே!
(வாழ்க்கை)
காதல் அரும்பிய
பொழுதிலே
கண்கள் மங்கிய
வேளையிலே
தவறுகள் முளைக்கத்
தோல்வியே!
(காதல்)
(காதல்)
காதலர் சந்திக்கும் தெருவிலே
அழகாய் மின்னும்
ஆண்களே
தங்கச் சங்கிலி
அணிந்தே
உந்து உருளியில்
பாய்வோரே
நாளும் மகிழுந்தில்
செல்வோரே
பெண்ணவள் கேட்டால்
சொல்வீரே
எல்லாம் வாடகை என்பீரே
காதலும் முறிவதைப்
பார்ப்பீரே
(வாழ்க்கை)
(காதல்)
காதலர் சந்திக்கும்
தெருவிலே
அழகாய் உடுத்தும்
பெண்களே
மின்னும் அணிகலன்
அணிந்தே
எடுப்பாய் அன்னநடை
பயில்வோரே
இசையோடு ஈர்த்திடப்
பேசுவோரே
ஆணவன் கேட்டால்
சொல்வீரே
நண்பரெனப் பழகியது
என்பீரே
காதலும் முறிவதைப்
பார்ப்பீரே
(வாழ்க்கை)
(காதல்)
காதலர் சந்திக்கும்
தெருவிலே
வேளைக்கு வேளை
சந்திப்பீரே
என்னுயிரே நம்பு
என்பீரே
அன்பாய் முத்தமும்
கொடுப்பீரே
மணமுடிக்கக் கேட்டால்
சொல்வீரே
பெற்றவர் விரும்பாரென
மறுப்பீரே
காதலியும் கண்ணீர்
வடிப்பாளே
காதலும் முறிவதைப்
பார்ப்பீரே
(வாழ்க்கை)
(காதல்)
காதலர் சந்திக்கும்
தெருவிலே
நாளுக்கு நாள்
சந்திப்பீரே
நீயின்றி நானில்லை
என்பீரே
நோகாமல் அன்பாய்
அணைப்பீரே
மணமுடிக்கக் கேட்டால்
சொல்வீரே
பெற்றவர் விரும்பிய
படியென்றே
காதலனும் குடிச்சு
வெறிப்பாரே
காதலும் முறிவதைப் பார்ப்பீரே
(வாழ்க்கை)
(காதல்)
காதல் என்ற போர்வையிலே
இணையாமல் பிரிவதும்
நிகழுமே
காசுகளைப் பறிப்பதும்
நிகழுமே
கற்பையும் இழப்பதும்
நிகழுமே
பிரிந்தவர் வாடுவதும்
நிகழுமே
வாடியோர் சாவதும்
நிகழுமே
எதுவும் காதலிக்க
முன்னரே
எண்ணிப் பார்க்க
வேண்டுமே!
(வாழ்க்கை)
(காதல்)
புதுமையான வகையில் நன்று வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு