Translate Tamil to any languages.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

இதோ! உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்


வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...
என்ற எனது பதிவில் புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர்களது பத்துச் செயல் திட்டங்களுக்கு அப்பால் பதினொன்றாவதாக உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் வழங்கும் செயல் திட்டத்தை, புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான செயல் வீரர்கள் அறிவித்துள்ளனர்.

வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

உங்கள் நா வண்ணம் போல, உங்கள் கை வண்ணத்தைக் காட்ட அழகாக வடிவமைத்த ஐந்துவகைப் போட்டிகளைக் கீழே தருகின்றேன்.

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -4 பக்க அளவில் 4பக்கம்இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - 4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - 4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டிஇளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகொளிரும் தலைப்போடு

போட்டி ஒழுங்குகள் (விதிகள்) பல உண்டு. அதில் "வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்." என்பதையே நான் விரும்பிப் போற்றுகிறேன்

புதிதாக வலைப்பக்கம் தொடங்கிப் போட்டியில் கலந்துகொள்வோருக்கு எனது முதன்மை வாழ்த்துகள். ஆயினும் அவர்கள் தொடங்கிய வலைப்பக்கத்தைத் தொடர்ந்து பேண நமது வலைப்பதிவர்கள் மதியுரை (ஆலோசனை) தருவார்கள் என உறுதிமொழி தருகின்றேன்.

என்னடா இந்தச் சின்னப்பொடியன் எப்பவும் இப்படித்தான்... படியெடுத்துப் பகிருவான், ஆனால் முழுமையாகத் தரமாட்டான் என்று குழம்பாதீர்... முழுமையாக, நிறைவாக (திருப்தியாக) தகவலறிந்து; போட்டியில் பங்குபற்றி, உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் பெற விரும்பும் எல்லோரும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி படிக்கலாம்.

"விரும்பும் எல்லோரும்" என்பதை விட எல்லோரும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கெடுங்க விரும்புங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எழுத்து எல்லாம் நன்று - அதை
இன்று வெளிக்காட்டி
போட்டிக்கு அனுப்பிப்போட்டால்
கிட்டுவது பரிசில் மட்டுமா?
புகழும் அல்லவா கிட்டும்!
நீங்கள் பரிசில் பெற்றால்
சிறந்த படைப்பாளி என்றே - உங்களை
ஏற, இறங்கப் பார்ப்பாங்களே!
பரிசில்களுக்காக அல்ல
சிறந்த படைப்பாளி என்று - நீங்கள்
உங்களை அடையாளப்படுத்தவேனும்
இன்றே - உலகளாவிய
மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில்
பங்கெடுங்க விரும்புங்களேன்!

26 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. நன்றி யாழ்ப்பாணரே! நாம் இணையத் தமிழால் இணைந்திருப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாழ்ப் பாவாணர்! இவரின் முன்னோடிகள் தாம் யாழ்ப்பாணரோ?

      நீக்கு
    2. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான முழு முயற்சிகளிலும் தங்களின் பங்கு முதன்மையானது.

      நீக்கு
    3. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்

      நீக்கு
  5. வணக்கம் அய்யா
    போட்டியைப் பற்றிய செய்தியினை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அய்யா. கடல் கடந்தும் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான விசயம் அய்யா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. வெற்றி கேடயங்களை வழங்குவது தமிழ் களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) என்று இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) என இணைப்புக் கொடுத்துவிட்டேன்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் மதியுரைக்கும் நன்றி.

      நீக்கு
  7. அருமை! தாங்களும் பகிர்ந்துகொண்டமைக்கு! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. நன்றி ஐயா
    எனது வலையில் இப்போட்டிக்கான கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஊக்கம் தரும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமாறு அமைந்துள்ள பதிவுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பங்குபெறுவோர் நன்மை அடைய வேண்டும்
      அதுவே என் விருப்பம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!