Translate Tamil to any languages.

புதன், 10 டிசம்பர், 2014

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.

2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/

2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.

18 கருத்துகள் :

  1. மகிழ்ச்சி ஐயா. தொடருங்கள் உங்கள் பணியை!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தகவலை அனைவரின் பார்வைக்கு பகிர்தமைக்கு நன்றிகள்.. பல... அடுத்த போட்டி சம்மந்தமான பதிவுகள் விரைவில் வலம் வரும் என்பதை முன்பே அறியச்செய்துள்ளீர்கள்...மிக்க மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி த.ம1
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. போட்டிகள் தொடரட்டும் எமது வாழ்த்துகள் நண்பரே..
    தாங்களும் இடம் பெற்ற எமது புதிய பதிவு காண்க...
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  4. சிறப்பாக போட்டி நடத்தி பார்சிகள் கொடுத்து ஊக்குவித்தமைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பணி....
    தொடரட்டும் தங்கள் போட்டிகளும் பரிசுகளும்...

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி ஐயா!
    பரிசுகள் கையில் வரப் பெற்றதும் அறியத் தருகிறேன்!

    போட்டியைச் சிறப்பாக நடத்தியமைக்கும்
    பரிசுகளைத்தந்து ஊக்குவிக்கும் உங்களுக்கும் சகோதரர் ரூபனுக்கும்
    உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் சிறப்பான பணி! நல்ல ஊக்கம் அளிக்கும் ஒரு பணியும் கூட! வாழ்த்துக்கள் தங்கள் பணி இன்னும் சிறக்க!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!