Translate Tamil to any languages.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கள்ளுக் குடியை நிறுத்த...


மாலை நேரம் தெருவில நம்மாளுகள் கூடி நாட்டு நடப்புப் பேசுவாங்க... அப்படி ஒரு மாலைப் பொழுதில் இப்படி ஒரு உரையாடல்:

வெடியர் : நம்மாளுகள் கள்ளுக் குடிப்பதை நிறுத்த நல்ல வழியைக்
காட்டுவீர்களா?

குண்டர் : இதென்ன ஒரு சின்ன வேலை. குடிப்பவர்களைச்
சிறையில் அடைத்தால் போச்சே!

வெடியர் : இதெல்லாம் அரசுக்குப் பெரிய செலவைத் தருமே!
ஆகையால், செலவில்லாத வழியைக் கூறுங்களேன்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுப் பறிக்கும் சீவல்
தொழிலாளர்களுக்கு இலவசமாகக் கணினி படிப்பித்து, மாற்றுத்
தொழிலை வழங்கினால் போச்சு.

வெடியர் : அப்ப குடிகார ஆட்கள் என்ன செய்வினம்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுக் குடித்த பின்னர் "தொம்"
என்று விழுவினம்.....

கள்ளுக் குடியென்ன, அற்ககோல் கலந்த தண்ணீர்க் குடியென்ன சூழல் மாற்றத்தாலேயே கட்டுப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!