Translate Tamil to any languages.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பா புனைய விரும்பு

அன்று
"அறம் செய்ய விரும்பு" என்று
பாவலர் ஔவை சொன்னாங்க
எல்லோரும் நம்பினாங்க...
இன்று
"பா புனைய விரும்பு" என்று
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காழான் போன்ற
சின்னப் பொடியன்
யாழ்பாவாணன் சொன்னால்
எவர் தான் நம்புவார்?
காதலிலே தோல்வியுற்றால்
கள்ளுக் கடைப் பக்கம் போகாமல்
பா (கவிதை) புனையுங்க என்று
உங்களை ஏமாற்றிய
காதலிகள் சொல்ல;
பச்சை அரளிக் கொட்டை
அரைத்து விழுங்கிச் சாகாமல்
பா (கவிதை) புனையுங்க என்று
நீங்கள் ஏமாற்றிய
காதலிகளுக்குச் சொல்வதும்
எனக்குத் தெரியாத ஒன்றல்ல...
என்றாலும்
சாவதை விட்டிட்டு
உடலழிந்தாலும்
எம்மைச் சாகாது வாழ வைக்கும்
பாக்(கவிதை)களை புனையுங்க என்றீங்க
அதைத் தான்
நானும் விரும்புகிறேன்!
பாரதி செத்தானா...?
பாரதிதாசன் செத்தானா...?
அடேய்! நம்ம
கண்ணதாசன் செத்தானா...?
இல்லை!
இன்னும் இல்லை!
தமிழ் அழியாத வரை
இவர்களுக்குச் சாவே இல்லை!
ஆமாம்!
அவர்களின் பாக்(கவிதை)கள்
எம் கண்ணைக் காதை
தீண்டும் போதெல்லாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!
ஓ!
பாவலன் என்றால்
சாகாக் கொடை(வரம்) பெற்றவனே...
ஆதலால்
நீயும் பாபுனைய விரும்பு!

உறவுகளே! எனது yarlpavanan.tk தளத்திற்குச் சென்று "தூய தமிழைப் பேணு என்றால்…" என்ற பாவை(கவிதையை) வாசிக்க மறக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!