| Translate Tamil to any languages. |
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
திங்கள், 9 ஆகஸ்ட், 2021
ஆண்களுக்கு ஒரு புண், பெண்களுக்கு இரு புண்
காதல் இயற்கையாக அமைந்தால்
காதலில் பிரிவே கிடையாதாம் - அந்த
காதலர்களுக்குச் சோதிடத்திலும்
குறிப்பேதும் பார்க்காமல் பொருந்துமாம்!
தாளில் அம்பு செய்து
எய்துவிட்டால் காதல் வரும்
பள்ளிப் பருவத்தில் தான்…
கண்ணடித்தால் காதல் வரும்
பாடல்களில் தான்…
அழகைக் காட்டியதும் - தங்க
அணிகலனைக் காட்டியதும் - நாலு
காசைக் காட்டியதும் மதிமயங்கி
காதல் ஊற்றெடுத்தும் வரும்
திரைப்படப் பாணியில் தான்…
இப்பவெல்லாம்
இயற்கைக் காதல் இங்கில்லை
மணமுறிவு போல காதல் முறிவு
மலிஞ்சு போச்சுக் காணும்!
தங்கள் தங்கள் விருப்படைய
காதலை ஊடகமாக்கினால்
பின் விளைவுகள் சொல்லிலடங்காதே!
மண், பெண், பொன் விருப்படைய
காதலிப்பதாய் ஆண்களும்
எடுப்புக்கு (Styleக்கு), வருவாய் ஈட்டலுக்கு
காதலிப்பதாய் பெண்களும்
ஒருவரை ஒருவர் ஏமாற்றியதால்
காதல் தோல்வியாம் - விளைவாக
ஆண்களுக்கு ஒரு புண்ணும்
(உள்ளப் புண் மட்டும்)
பெண்களுக்கு இரு புண்ணும்;
(உள்ளப் புண்ணும் கருப்பைப் புண்ணும்)
ஏற்பட்ட பின்னரே - அவர்களுக்கு
மூளையே வேலை செய்ததாம்!
காலம் கடந்து அறிவு வந்தும்
பயனேதும் தரப் போவதில்லையே!!
காதல் புனிதமானது தான் - அது
திருமணமே இலக்கு - அதற்குப் பின்
இருவர் உள்ளத்து எதிர்பார்ப்புமென
காதலிப்போருக்கு மட்டுமே போருந்தும்!
காதலித்த பின்னர்
திருமணத்திற்காகப் போராடிய
காதலர் இலக்கியங்கள் சொல்லுமே!
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
செவ்வாய், 27 ஜூலை, 2021
இணையத்தில் ஏமாளிகளும் ஏமாற்றிகளும்
இணைய வழியில் பலர் ஏமாளிகளாகவும் ஏமாற்றிகளாகவும் உலா வருகின்றனர். இணைய
வழியில் பணம் பறிக்கும் கும்பலே அதிகம். அந்த வகையில் விழிப்புணர்வாக இருக்கச் சிந்திப்போம்.\
நல்ல நட்பாக இணைகிறேன் என்றாள்
அன்புப்பரிசு அனுப்புவதாகச் சொன்னாள்
அந்தப்பொதி உன்வீட்டுக்கு வர
இந்தச்செலவு 200டொலர் அனுப்பாம்
விழித்தேன், மூளை
வேலை செய்தது
அன்புப் பரிசோ நஞ்சுப் பரிசோ
தன்செலவில் அனுப்பியிருந்தால் நம்பலாம்
பணமனுப்பினால் பொதிவராதெனப் படித்தேன்
படித்ததைப் பகிருவதே என் வேலை
படித்ததும் திருந்துவது நீங்கள் ஆச்சே!
சும்மா சொல்லக் கூடாது - ஒருவளென்
அம்மாவை விட அழகியவள் தான்
ஒன்றும் வேண்டாம் அன்பே தேவையென்றாள்
என்றும் என்னவள் இருக்க இவளேனென
நானொரு கிழவன், மனைவி
மகளிருக்கு
நானொரு போதும் ஏற்கேன் என்றேன்!
பரவாயில்லை, இணையவல்ல
இணையத்திலென்றாள்
பரவாயில்லையெனக் கவனிப்புடன்
அரட்டையடித்தேன்!
உங்கள் ஊருக்கு வரவுள்ளேன் என்றாள்...
எங்கள் ஊரினழகைப் பார்க்கலாம்
என்றேன்...
வந்திறங்கச் சின்னச் செலவு வருமாம்...
தந்துதவு 500டொலர் என்றுரைத்தாள்
அவளும்!
இத்தனையும் உண்மை தான் உறவுகளே!
அத்தனையும் இணையத்தில் போலிகள் தான்!
சிந்திக்கச் சொல்லிவைச்சேன் உங்களுக்கு
சிந்திக்காது விட்டால் சிக்கலில்
சிக்குவீர்!
இணையத் திருடர் மற்றும் ஏமாற்றிகள்
காதல், காமம் என்றெல்லாம் வரலாம்
ஏமாறாதீர், வாழ்வையும்
வளங்களையும் இழக்காதீர்!
கண் முன்னே காண்போரைக் கூட
கண்ணாலே நம்ப முடிவதில்லைக் காணும்
தொலைதூர இணையவழி இணைவோரை நம்பி
விலைபோய்ப் பிச்சை எடுக்காமல் தப்பவே
இரண்டு பெண்களின் நான்கு கண்களில்
திரண்டிருந்த ஏமாற்று உட்பொதிவை
உமக்கு உரைத்தேன் ஏற்பீரென
நம்புகிறேன்!
நானென்ன ஆண்தானே, பெண்கள்
நிலையறிந்தோம்
ஏனென்று கேட்குமுன்னே தற்கொலை
செய்தார்கள்!
இருபாலாருமே இணைய வழியில் ஏமாறாதிருக்க
வருமெதிர் காலத்தில் ஏற்றம் காண
மாற்றம் கண்டு முன்னேறப் பாருங்கள்!
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
புதன், 30 ஜூன், 2021
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) - 2
சமகாலத்தில் பலரும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களைக் கவிஞர்கள் என்றழைப்பது குறைவு. ஏனென்றால், அவர்கள் கவிதைகள் போல எழுதிப்போட்டுத் தாம் கவிஞர்கள் எனப் பெயரிட முடியாது போயுள்ளனர்.
மரபுக் கவிதைகள் என்றால் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பல யாப்பிலக்கணப்படி வரும். அதற்கு மேலே வசன கவிதைகள் (உரை நடையல்ல: கவிதை நடையாலானது), புதுக் கவிதைகள் (எதுகை, மோனை, உவமை, படிமம் எனப் பலவுண்டு) என்றவாறு பல கவிதை அமைப்புகள் இருக்கின்றன.
இவ்வாறான கவிதைகள் போல எழுதிப்போட்டு (அதாவது, அதன் இலக்கணக் கட்டமைப்பைப் பின்பற்றாது) இவ்வாறான கவிதைகள் எழுதினோம் என்றுரைத்தால் புலமை மிக்கவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வர். இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கிய நயம் இருந்தால் மட்டுமே புலமை மிக்கவர்கள் கவிதையாகக் கருத்தில் கொள்வர்.
இதனையும்
மீறிக் கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு ஓர் எளிமையான கவிதைக் கட்டமைப்பை அறிமுகம்
செய்ய விரும்புகிறேன். இதற்கும் எளிமையான இலக்கணக் கட்டமைப்பு இருந்தாலும் கூட
கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு இதுவோர் அடித்தளமாக (அத்திவாரமாக) இருக்குமென
நம்புகின்றேன். எளிமையாகக் கண்ணும் கருத்துமாக இதனை உள்வாங்கினால் எந்தக் கவிதை
எழுதவும் இக்கட்டமைப்பு ஊக்க மாத்திரையாக இருக்கும்.
இந்தக்
கவிதைக் கட்டமைப்பை தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES) என்றழைக்கிறார்கள்.
எட்டுச் சொல்களுக்குக் குறையாமலும் பன்னிரண்டு சொல்களுக்கு மேற்படாமலும் (8-12)
நான்கடிகளில் ஆக்கப்படுவதே இந்தக் கவிதைக் கட்டமைப்பு ஆகும்.
1. குறைந்தது
ஓரடியில் இரண்டு சொல்கள் வரலாம்.
2. அதிகமாக
ஓரடியில் மூன்று சொல்கள் வரலாம்.
3. மொத்தம்
நான்கு வரிகளில் எழுத வேண்டும்.
4. எளிமையான
சொல்களால் (அதாவது, தனிச் சொல்) எழுத வேண்டும்.
5. இரண்டு,
மூன்று சொல்கனை இணைத்துத் தனிச் சொல்லாகப் பாவிக்கக்கூடாது.
6. கற்பனை,
உவமையோடு மூன்று காலத்திலும் எழுதலாம்.
7. எதுகை,
மோனையும் வரக்கூடியதாக எழுதலாம்.
8. முதலிரு
அடிகளில் சொல்ல வேண்டிய செய்தி இருக்க வேண்டும். இரண்டாம் அடியில் திருப்பம்
இருக்க வேண்டும்.
9. அடுத்திரு
அடிகளும் அச்செய்தியை விளக்குவதாகவோ அச்செய்திக்கு முரணாகவோ அமையலாம். அதாவது
முதலிரு அடிகளும் சொல்லும் செய்தியை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.
10. இக்கவிதைக்குத் தலைப்பு, குறியீடுகள் இடத்தேவையில்லை. குறித்த சூழலைப் படம் பிடித்துக் காட்டியது போன்று கவிதையை அமைத்தால் சிறப்பு.
முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க உதவும். கவிதைகளுடன் தாங்களும் பிணைந்து இருந்தால் அதாவது தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கவிதை புனைந்தால் உங்களாலும் தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES) புனைந்து வெற்றி நடை போட முடியும்.
இந்தக் கவிதைக் கட்டமைப்பின் அடிப்படையில் தாங்கள் தெளிவு பெறச் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றேன்.
1. பிள்ளைகள்
உள்ளம்
கல்லாகிப்
போச்சுது
பெற்றோர் உள்ளம்
பிள்ளைகளுக்காய் அழுகிறது
இரண்டு சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. ஓவ்வொரு வீட்டு நடப்பையும் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
2. வானம்
கறுத்துப் போயிட்டுது
மழை
வருவதற்கு அறிகுறியாம்
ஏழை வீட்டில்
குழப்பம்
ஓட்டைக் கூரையைச் சரிப்படுத்தவாம்
மூன்று சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளும் சொல்லும் செய்தி உண்மையானால் அடுத்திரு அடிகளும் அடுத்துச் செய்ய வேண்டியதை விளக்குகிறது. ஏழை வீட்டுத் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
3. உளநலம்
பேணினால்
நாளை நமதே
உழைப்பும்
சேமிப்பும் தான்
நாளையும் வாழ உதவுமே
இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. உளநலம் இருந்தும் நாம் வாழ வருவாயும் சேமிப்பும் தேவை என்பதை உறுத்தும் கவிதை இது.
4. எல்லோரும்
படிக்கிறார்கள்
மக்களுக்குப்
பணியாற்றுவோர் சிலரே
மூளைசாலிகள்
வெளியேற்றம்
நாட்டிற்கு மனிதவளப் பற்றாக்குறையே
இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. எங்கள் நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
மேலே நான்கு வகை எடுத்துக்காட்டுகள், அவை நான்கடியிலும் சொல்கள் கையாளும் ஒழுங்கை விளக்கி இருக்கும். இனி வரும் நான்கு கவிதைகளைப் படித்து, மேலதிகத் தெளிவைப் பெற்று நீங்களும் தன்முனைக் கவிதைகளில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தலாம்.
கொரோனா
எச்சரிக்கை தான்
காற்றில்
பறக்கிறதே
மக்களும்
கவனிப்பதில்லை
கொரோனாவும் விரைவாகப் பரவுகிறதே
காதல் காதல்
என்று
தெருச்
சுற்றும் பிள்ளைகள்
பிள்ளைகள்
படிக்கிறார்கள் என்று
கனவு காணும் பெற்றோர்
குறைந்த
சொல்கள்
நிறைந்த
பொருளுள்ள கவிதைக்கு
இசையூட்டும்
சொல்லாடல்
கவிதையை வாசகர் சுவைக்கவே
எழுதுங்கள்
எழுதுங்கள்
நாட்டவர் நாலறிவைப்
படிக்கவே
சுவையான
எழுத்தாக்கம்
வாசகர் உள்ளத்தை ஈர்க்குமே
கவிதை புனைவதே எமது தொழில் என்போருக்கு, பாப் புனைவதில் நாட்டம் உள்ளோருக்கு இந்தத் தன்முனைக் கவிதைக் கட்டமைப்பு அறிமுகம் நன்மை தருமென நம்புகிறோம். சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் உதவும். இவ்வாறான எளிமையான கவிதைக் கட்டமைப்பின் பயிற்சியாக மேலுள்ள கவிதைகள் இருக்கும்.
மீள மீள வாசித்துப் புரிந்து தன்முனைக் கவிதைகள் புனைவதில் வெற்றி பெற்றால் ஏனைய கவிதைகள் புனைவது இலகுவாயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் இலக்கணம் கற்று வசன கவிதை, புதுக் கவிதை, மரபுக் கவிதை, இசைப் பாடல் என நீங்களும் பாப் புனைவதில் முன்னேறலாம். நீங்களும் பாப் புனைவதில் முயன்று பெரிய கவிஞர்களாக மின்ன வேண்டுமென இலக்கிய உலகம் காத்திருக்கின்றது.
தன்முனைக்
கவிதைகள் (SELF
-ASSERTIVE VERSES) - 1
https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி இதன் முதற் பகுதியைப் படித்துப் பயன்பெறுக.
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
வெள்ளி, 28 மே, 2021
எழுதுங்க, முடிவை வாசகர் சொல்லட்டும்
உள்ளத்தில் ஏற்பட்ட நோவை
உடலில் ஏற்பட்ட வலிகளை
எழுதும் போது மறக்காமல்
எதுகை, மோனை அமைய
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்களுக்கும்
கவிதைகள் எழுதத்தான் வருமே!
பலவாண்டுகள் பக்குவமாய் பழகி
பலரும் பார்க்கத்தான் காதலிப்பதாய்
காலம் கடத்திப் போட்டு
காலமானதும் அண்ணா என்றாளே!
எழுதுங்கள் இப்படித்தான்
எழுதுவது கவிதை ஆகலாம்!
வேறுபாடு உள்ளதாய்
எனக்குத் தெரியவில்லை.
"காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! " என
பணத்துக்காய் உறவுகளென்று
எழுதி முடிப்பது கவிதை!
"பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்) " என
மனித உள்ளத்தை உரித்துக் காட்டினால்
கவிதை என்றாலும் பாடல் என்கிறாங்க.
ஓ! இரண்டிலும்
இசை வேறுபாடு இருக்காம்
எழுதுங்க உறவுகளே!
நல்லது எல்லாம் - அவை
கவிதையா பாடலா
வாசகர் தீர்ப்புக் கூறட்டும்!
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்!
தேடிப் போகத் தான்
எனக்கு விருப்பம் இல்லை
பணம் உள்ளவர் கை தானே
அவர்களை இழுத்திருக்கும்!
என் கை நிறைய
ஒரு நாள் பணம் இருக்கலாம்
அந்த வேளை பார்த்து
என் பக்கம் அவர்கள் திரும்பலாம்!
பணம் பத்தும் செய்யும் என்பது
இந்தத் திருவிளையாடல் தானோ!!
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
பணம் இருந்தால் கடவுள் என்பார்
(குணம்)
பணம் பத்தும் செய்யும் என்பதா
குணம் உள்ளவர் வேண்டாம் என்பதா
(பணம்)(குணம்)
குணம் உள்ளவரை தான் விறகா
நோய் வந்தபின் தான் உணர்வா
(பணம்)(குணம்)
உடலைப் பேணப் பணம் போதுமா
உடல் நொந்த பின்னே தெரியுமா
(பணம்)(குணம்)
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்)(குணம்)
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.




