என் இல்லாள் கூட "எழுதி எழுதி எழுதுதாளும் கிழிந்தும் எழுதுகோலும் தேய்ந்தும் போனது தான் மிச்சம். நாலு காசு வருவாய் வருகிறதா? தருகிறதா? என்னத்தை எழுதிக் கிழித்து என்னத்தைப் பண்ணப் போகிறாய்? நாலு காசு உழைத்தால் பரவாயில்லை!" என்கிறாள். எதிர்ப்புகள் வரினும் உள்ளம் நிறைவடையுத் தான் எழுதுகிறேன்.
மாற்றாருக்குச் சொல்லுகின்ற வழிகாட்டலையே நானும் பின்பற்றுகிறேன். அதனைக் கீழே தருகின்றேன்.
தாங்கள் எழுதுவதைத் தொடருங்கள்.
எவர் எதைச் சொன்னாலும் காதில் விழுத்துங்கள். ஊருலகம் ஏற்பதைப் பின்பற்றுங்கள்.
எழுதுவோருக்கு வாசகர் மட்டுமே பின்னூட்டி. அஞ்சாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
எழுத எழுத எழுத்தின் நடை அழுகுறும். உள்ளம் நிறைவடைய உள்நோய்கள் கிட்ட நெருங்காது. இலக்கியப் படைப்பாக்கம் கூட ஓர் உளச் சிகிச்சை தான்.

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!