1
கடவுளைக் கண்டீரா? என்று
எல்லோரும் கேட்கின்றனர்!
கடவுள்மனித வடிவில் தான் வருவாராம்!
நான் சொன்னால்
யாரும் நம்புவதாயில்லை!
தானே கடவுள் என - மனிதன்
நடிக்கப் புறப்பட்டதால் தான்
என் பேச்சு எடுபடவில்லைப் போலும்!
2
வாழத் துணிந்து விட்டால்
வருகின்ற திறனாய்வு (விமர்சனம்) எதற்கும்
முகம் கொடுக்கத் தயாராகவே
இருக்க வேண்டும் பாரும்!
எவரும் தூற்றலாம் காறித் துப்பலாம்
குறைகள் கூறித் திரியலாம்
பழித்து நெழித்து நையாண்டி செய்யலாம்
எதற்கும் எவரையும் பகைக்காமல்
நம்குறையைச் சரி செய்து
நல்லவற்றைக் கருத்தில் எடுத்து
நமது வாழ்வைத் தொடர்ந்தால் போதுமே!
நம்மை நாம் எடைபோட்டு
எம்மைத் திருத்திக் கொண்டால்
எவரும் எம்மை எடைபோட்டு
திறனாய்வு (விமர்சனம்) செய்ய இடமிருக்காதே!
3
கையும் மெய்யுமாய் களவு பிடிபட்டது!
எப்படி? எப்படி?
என்னைத் தூற்றியோர் எவரும்
மக்களும் நானும்
ஒன்றாய் இருக்கின்ற வேளை
முகம் காட்ட முடியாமல்
ஓடி ஒதுங்கியே மறைந்தனர்?
ஏன் காணும்? ஏன் காணும்?
உண்மை பேசி உதவி இருந்தால்
மக்கள் முன்னிலையில்
என்னுடன் தாங்களும் இணைந்து இருக்கலாமே!
கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்கு என்பதும்
பலநாட் கள்ளர் ஒருநாள் பிடிபடுவர்
என்பதும் கூட
நேரில் தலையைக் காட்டா விட்டால்
கையும் மெய்யுமாய் களவு பிடிபடுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!