| Translate Tamil to any languages. |
ஞாயிறு, 19 அக்டோபர், 2025
எல்லை மீறாதீர்!
"அட, கட்டையிலே போவானே!
அட, பாடையிலே போவானே!
அட, சவப்பெட்டியிலே போவானே!
அட, அகவை தொன்னூற்று ஒன்பதிலும்
பணம், பொருள், பண்டத்தை
அள்ளிக்கொண்டு போவேன்டா!
அடப்பாவி! என்ர பெட்டையைக் கெடுத்திட்டு
செத்துப் போவியேடா?
புண் வந்து, புளுப் பிடித்து, உறுப்பழுகி, ஒழுகி
அணு அணுவாய் செத்துத்தான் போவாய்!"
என்றெல்லோ - எங்கட
அம்மம்மா, அப்பம்மா
மண்ணள்ளிப் பறக்க வீசி
தெருப்பொறுக்கியைத் திட்டேக்க பார்த்தேன்.
பெத்தவளுக்கே
பெண்ணின் அருமை தெரியும்
பொம்பிளைப் பொறுக்கிப் பொடியளுக்கு
இதெல்லாம் எப்பதான் விளங்குமோ?
"ஒருவனுக்கு - ஒருவள்" என்ற
ஒழுங்கைப் பின்பற்றி வாழ்ந்தால்
உலகத்திலே நற்பெயர் ஈட்டலாமே!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!