Translate Tamil to any languages.

சனி, 5 மே, 2018

இறைவனின் ஒறுப்புத் தானோ!


நீரிழிவுக்காரனும்
நெடும் தூரப் பயணியும்
கட்டுப்படுத்த இயலாத ஒன்று
சிறுநீர் கழித்தலையே!
கட்டுப்படுத்த இயலாத சிறுநீரை
கண்ட இடத்திலும் கழிப்பதாலே
மாற்றாருக்கு நோய்கள் உண்டாவதை
கட்டுப்படுத்த இயலாமல் போகுமே!

நானோ நீரிழிவு நோய்க்காரன்!
நெடும் தூரப் (கொழும்பு-யாழ்) பயணத்தில்
இடை வழியில் (குருநாகலை நெருங்க) மாட்டினேன்...
நானும் சிறுநீர் வெளியேற்ற
பேரூந்தை நிறுத்தி இறங்க முன்னே
பேரூந்திற்கு உள்ளேயே கீழங்கி
ஈரமாகியதைக் கண்டுகொண்டேன்!
பேரூந்தில் இருந்து இறங்கிய பின்னே
கீழங்கியைப் பிழிந்து போட்டு
நறுமணத் (சென்ற்) தண்ணீரை அடித்து
சிறுநீர் மணக்காதவாறு சரிப்படுத்தி - அடுத்த
பேரூந்தில் ஏறி ஊருக்கு (யாழ்) வந்து சேர்ந்தேன்!

சிறுநீர் கழித்தலை
கட்டுப்படுத்த இயலாமல் சிலரும்
கண்ட இடத்தில் கழிக்கும் சிலரும்
இறைவனின் ஒறுப்புக்கு உட்பட்டவரோ!
இப்படியான வேளை
துன்பப்படும் உறவுகளைப் போல
நான் பட்ட துன்பம் அதிகம்!

துன்பப்படுவது நான் மட்டுமா?
இறைவனின் ஒறுப்புக்கு உட்பட்டு
நோய்களை வேண்டிக்கொண்ட
எல்லோரும் தானே! - அதற்காக
மாற்றாருக்கு தொற்று ஏற்படுத்தும்
செயல்களில் இறங்கினால் பாரும்
தொற்றிய நோய்கள் - ஒருபோதும்
எம்முடலை வீட்டு நீங்காதே!

*இது கவிதையல்ல; ஒரு செய்தி!
பொது இடங்களில் அழுக்கு ஆக்காதீர்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!