Translate Tamil to any languages.

வெள்ளி, 13 மே, 2016

இரண்டடக்கேல்


விருப்பங்களை (ஆசைகளை) அடக்க முடியாமல் - நம்மாளுங்க 
பெரும் விருப்பங்களை (பேராசைகளை) வளர்த்து - அதனை
அடைய முயன்றே கடைசியில் காண்பதோ - அதன்
அறுவடையாக (பின் விளைவாக) நமக்குக் கிட்டுவதோ
சோர்வும் (நட்டமும்) துயரமும் (துன்பமும்) தான் - அதனை
இரண்டடக்கேல் என நினைவூட்டுவதா?

நம்மாளுங்க - தங்கள்
அன்பு உணர்வை வளர்க்கலாம் - ஆனால்
பாலியல் (Sex) உணர்வை அடக்க வேண்டுமே - அதை
அடக்கு என்றதும் கோபம் வருமே - அதையும்
சேர்த்துத் தான் இரண்டை அடக்கு என்றாரோ
பாவரசர் கண்ணதாசன் அவர்கள்!

இரண்டடக்கேல் என்றல்லவா
பாவரசர் கண்ணதாசன் சொன்னார் - அப்ப
இரண்டை அடக்காதே என்றல்லவா
பொருள்கொள்ள வேண்டியிருக்கு - அப்ப
மலம் கழிப்பதையும் சிறுநீர் (சலம்) அடிப்பதையும்
இரண்டடக்கேல் என்றாரோ!

உடலுக்குள்ளே சிறுநீரகம் - உண்மையில்
உண்டதை, குடித்ததை வடிகட்டி
கழிவுகளைக் கழித்து விடுவதால் தான்
மலமும் சிறுநீரும் (சலமும்) தேங்கும் - அந்த
இரண்டையும் அடக்காமல் விட்டால்
நோய்கள் கிட்ட நெருங்காமல் போகுமே!

குறிப்பு: உடற் கழிவுகளான மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேறத் தோன்றும் நேரத்தில் அடக்கவும் கூடாது. மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேற வேண்டி வருமே என உண்ணாமல், குடிக்காமல் இருக்கவும் கூடாது. 

14 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அத்தியாவசிய விளக்கம், நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. விளக்கம் அருமை நண்பரே....
    வாழ்த்துகள் மேலும் பயனுள்ள
    தகவல்கள் தாருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!