Translate Tamil to any languages.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கண்டதே காதல் கொண்டதே கோலம் – 2

அழகுப் பெண்களைக் கண்டால்
ஆண்களின் உள்ளங்களில்
கொஞ்சம் தள்ளாட்டம் தான்...
சும்மா சொல்லக் கூடாது
கொஞ்சம் வெறிதான்...
கண்கள் ஊடாகப் புகுந்த அழகு
நரம்புகள் ஊடாக மூளைக்குப் போய்
காதற் கோலம் போடத் தூண்டும்...
தூண்டற் பேறாக
ஆண்களும் காதலில் குதிப்பார்கள்...
குதித்தவர்கள் சிலரைக் கேட்டேன்
"சில நாட்கள் கழிந்து போக
காதலே முறிந்து போயிற்றாம்..." என்றார்கள்...
"அவளோ மாற்றான் மனைவி" என்றான் ஒருவன்...
"அவளுக்கு வெளிநாட்டில கணவன்" என்றான் ஒருவன்...
"என் கையில பணமில்லை என்றதும்
அவள் காலை வாரிவிட்டாள்" என்றான் ஒருவன்...
"அவளுக்கு நல்ல மணமகனைப் பெற்றோர்கள்
பார்த்திருக்கிறார்களாம்" என்றான் ஒருவன்...
இன்னும் பலரைக் கேட்டிருந்தால்
இன்னும் எத்தனையோ சொல்லியிருப்பார்கள்...
உண்மையாகவே
கண்டதே காதல் கொண்டதே கோலம்
நல்லாய் இல்லைப் பாருங்கோ!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!