Translate Tamil to any languages.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கண்டதே காதல் கொண்டதே கோலம் – 1

கைகனக்க ஆள் சிவலையாய் இருந்தால்
சுத்தி வளைக்காமல் சொல்லுறேனே
பணக்கார அழகானவர் என்றால்
பெண்களின் உள்ளங்களில்
கொஞ்சம் துள்ளல் தான்...
ஆட்களைச் சும்மா இருக்க விடாது
கண்கள் ஊடாகப் புகுந்தவர்
நரம்புகள் ஊடாக மூளைக்குப் போய்
காதற் கோலம் போடத் தூண்டும்...
தூண்டற் பேறாக
பெண்களும் காதல் வானில் பறப்பார்கள்...
பறந்தவர்கள் சிலரைக் கேட்டேன்
"சில நாட்கள் கழிந்து போக
காதலே முறிந்து போயிற்றாம்..." என்றார்கள்...
"அவனோ மணமுறிவு பெற்றவராம்" என்றாள் ஒருத்தி...
"வேறு காதலிகளும்
அவனுக்கு இருக்காம்" என்றாள் ஒருத்தி...
"அவன் மனைவியின் பெயரே
காதல்ராணியாம்" என்றாள் ஒருத்தி...
"எல்லா நகைகளும் விற்று முடிய
நானோ பிச்சைக்காரியாக
அவனைக் காணவில்லை" என்றாள் ஒருத்தி...
"என் வயிற்றில சுமையைத் தந்துவிட்டு
அவனோ ஓடி மறைந்து விட்டான்" என்றாள் ஒருத்தி...
இன்னும் பலரைக் கேட்டிருந்தால்
இன்னும் எத்தனையோ சொல்லியிருப்பார்கள்...
உண்மையாகவே
கண்டதே காதல் கொண்டதே கோலம்
நல்லாய் இல்லைப் பாருங்கோ!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!