Translate Tamil to any languages.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

பாவலனுக்குத் தேடல் தேவை தான்...


"பாபுனைய எல்லோரும் கிளம்பினால்
பாக்களுக்கு என்னவாகும் - அவை
பாக்களின்றி வெற்றுக் கிறுக்கல் ஆகாதோ!" என
எண்ணிப் பார்த்தேன்.

இலக்கியத்திற்குப் பின் இலக்கணம் தோன்றியது என்பதைக் கூறி, பாபுனைதல் (கவிதை ஆக்கல்) இலக்கியமென இலக்கணம் அறியாமல் எழுதுவதும் அழகல்ல. நானும் புதுப்பா (புதுக்கவிதை) என்ற எண்ணத்தில் கிறுக்கினாலும் யாப்புப் பா (மரபுக் கவிதை) சிறந்தது என்பதையே ஏற்றுக்கொள்பவன். இதுபற்றிய உங்கள் கருத்துக்கணிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி வழங்குக.
நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?
http://paapunaya.blogspot.com/2013/11/blog-post_2149.html

எனது புதுப்பா (புதுக்கவிதை) கிறுக்கலால் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" எனப் பல பாபுனைய உதவும் குறிப்புகளை எழுதினாலும் என்னைவிடப் பெரிய அறிஞர்களின் கருத்துகளைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் புதுப்பா (புதுக்கவிதை), யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுத உதவும் மென்பொருள், ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் என நான் படித்த பதிவுகளை உங்களுடன் பகிருகிறேன்.

"புதுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். புதுக்கவிதை புனைவோர் புதுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031223.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031443.htm

இதேபோன்று பிறிதொரு தளத்தில் "கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை" என்ற பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://segarkavithan.blogspot.com/2013/07/blog-post.html

புதுக்கவிதை மீது விருப்பம் கொள்ள வைத்த "கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் நேர்காணல்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.tamilauthors.com/10/11.html

"மரபுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். மரபுக்கவிதை புனைவோர் மரபுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என மேற்காணும் இணைப்புகளை தேடிப் படித்துவிட்டீர்களா? அப்படியாயின் இப்பவே யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுதக் கிளம்பியாச்சா? கொஞ்சம் நில்லுங்கள்! நீங்கள் எழுதிய யாப்புப் பா (மரபுக் கவிதை) சரியா என்று பார்க்க ஓர் இணையத்தளம் இருக்கே! எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.avalokitam.com/

மேற்காணும் தளத்திற்குச் செல்லாமல் அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

மேற்காணும் மென்பொருளைக் கையாள்வது எப்படி? "மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் அவலோகிதம் மென்பொருளை எவ்வாறு கையாள்வது என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_05.html

அப்பாடா! இப்ப நீங்கள் பாவலர் (கவிஞர்) ஆகியிருப்பீர்கள். புதுப்பா (புதுக்கவிதை) அல்லது யாப்புப் பா (மரபுக் கவிதை) எதுவானாலும் உங்களால் துணிவோடு எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி என்றால்  blogger, wordpress தளங்களில் உலகெங்கும் தூய தமிழ் பேண நல்லதோர் வலைப்பூவைத் தொடங்குங்கள். பாவலர் (கவிஞர்) ஆனால் போதாது உங்கள் படைப்புகளை அரங்கேற்ற இவ்வலைப்பூக்கள் உதவுமே!

அதற்கும் கூட ஒருங்குகுறி (Unicode) சிக்கல் உங்களுக்கு வரலாம். அதற்காக "தமிழ் எழுதும் வழிகள்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் இணையப்பக்கங்களில் ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் காணப்படுகிறது.
http://meerantj.blogspot.com/2011/08/blog-post_03.html

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என்ற தலைப்பில் பல அறிஞர்களின் பதிவுகளை சும்மா நான் உங்களுக்குத் திரட்டித் தரவில்லை. நீங்கள் சிறந்த படைப்பாளியாகவும் உலகெங்கும் தூய தமிழ் பேண உதவுவீர்கள் என்றும் என நினைத்தால் தவறில்லை.

நான் ஒரு நாள் ஐம்பது கவிதைகளுடன் பொத்தகம் அச்சிட விரும்புகிறேன் என அறிஞர் ஒருவரிடம் முன்னே போய் நின்றேன். அவற்றைப் படித்த பின் "பாவலனுக்குத் தேடல் தேவை" என்றார். அதாவது, பா (கவிதை) வடிவம், பா (கவிதை) எழுத்து நடை, பா (கவிதை) அழகு, பா (கவிதை) இலக்கணம் எனப் படிப்பதோடு அடுத்தவர் கையாண்ட அடிகளைக் கையாளாமல் இருக்கவும் உதவும் என்றார். அவரது வழிகாட்டலுக்கு ஏற்ப, எப்படியோ எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் இப்படித் தொகுத்தேன்.

அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.

2 கருத்துகள் :


  1. வணக்கம்!

    மொழியறியச் செய்தீா்! விழிகுளிரப் பாட்டின்
    வழியறியச் செய்தீா் மணந்து

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!