எனக்கு உதவிய எவரையும்
என்னாலும் மறக்க முடியவில்லை...மறக்க முடியாமைக்கு காரணம்
என் வாழ்வில்
நானடைந்த முன்னேற்றம் தான்!
நாம் உயர உயர ஏறினாலும்
ஏற உதவிய ஏணி போன்ற
மனிதக் கடவுளரை மறப்பது
முறையாகுமோ? - அவர்களுக்கு
என்னாலும் உதவ முடியாவிட்டாலும்
ஆண்டவா அவர்களுக்கு உதவு என்று
ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டுகிறேன்!
"நீ பலனை எதிர்பாராது
பிறருக்கு உதவி செய் - நான்
உனக்கு உதவுவேன்." என
கருணை காட்டும் கடவுள் சொன்னதாக
மத வழிகாட்டலைப் பின்பற்றி
உதவும் நெஞ்சங்களைப் பணிகின்றேன்!

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!