நான் தனிப்பிறவி அல்ல
நான் தெய்வப்பிறவி அல்ல
நான் - மக்களோடு
மக்களாக வாழவேண்டிய பிறவி!
அப்படியாயின் - நான்
ஏன் தனிமையாய் இருக்கிறேன்?
என் உள்ளம் தொட்ட
எந்த உறவையும் விட்டு
நான் விலகியதில்லை!
என் உள்ளத்தைத் தொட்டுவிட
எவர் வந்து பழகினாலும் கூட
நான் உறவாக அணைப்பேனே!
என் தனிமையைப் போக்கவல்ல
அறிஞர், வாசகர், பயனர்
எவரையும் வரவேற்கக் காத்திருக்கிறேன்.
என் எழுத்தையும் பேச்சையும் நம்பாமல்
பழகிப் பாருங்கள்
உள்ளம் பொருந்தினால் உறவாக முடியுமே!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன்