Translate Tamil to any languages.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பாப்புனைவது பற்றிய தகவல்




தமிழ் இலக்கிய வரலாற்றில்
மு.கருணாநிதி அவர்களின்
இலக்கியத்துக்கு ஆற்றிய பங்கினை
தமிழ் வாழும் வரை - நம்மாளுங்க
உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்!
கலைஞர் கருணாநிதி - அவரது
இலக்கியப் படைப்புகளில் தான்
மறைந்து இருக்கின்றார்! - அவர்
மறைந்து விட்டார் என்பதை
நான்
ஒரு போதும் ஏற்கமாட்டேன்!

-----------------------------------------------------------------------------

எப்பவும் பணம் பறிப்பதே
பள்ளிகளின் வேலையாகிப் போச்சு!
பிள்ளைகளின் படிப்பில
ஆசிரியர்கள் அக்கறை காட்டுவதாக
எவரும் சொல்லவில்லையே!
கல்வி கூட வணிகப் பண்டமா?
நாடு இருட்டில் மூழ்கவா?
பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டாமா?
வெறுப்பானவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு
என்னால பதில் சொல்ல முடியல!

-----------------------------------------------------------------------------

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு
இரண்டு தடவை எழுதியும்
ஒரு பௌதீகவியலில "S" தான் - அந்த
உயிரழகனா - இந்த முகநூலில
குழுமங்கள் நடாத்தும் போட்டிகளில
பன்னிரண்டு பட்டங்கள் வென்றவரென
எல்லோரும் என்னைக் கேட்பதால்
நான் பெற்ற பட்டங்களையே
காற்றினிலே பறக்க விடுகின்றேன்!

-----------------------------------------------------------------------------
பாப்புனையச் சில தகவல்


எதுகை, மோனை, உவமை, ஒப்பீடு
எதுவுமற்ற எழுத்துகளால்
வரிவரியாகத் தொகுத்த பொய்கள்
என்றும் பா ஆகிவிடாதே!

எண்ணி எண்ணி எழுதித் தான்
எதுகை, மோனை முட்டிக்கொள்ள
உவமை, ஒப்பீடு சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்த உண்மைகள்
என்றும் பா ஆகிவிடாதே!

ஏமாறத் தூண்டிய பொய்கள்
உள்ளத்தை நோகடித்த மெய்கள்
சொல்லத் தோன்றிய எண்ணங்கள்
மெல்ல எழுதத் தூண்டவே
மோனைகள் மோதிக்கொள்ள
எதுகைகள் துள்ளிக்குதிக்க
உவமைகள் ஈர்த்துக்கொள்ள
ஒப்பீடுகள் சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்துக்கொள்ள
வந்தமைவதே 'பா' என்கிறார்கள்!

எழுத்து, அசை, சீர், தளை,
அடி, தொடை, அணி, நடை
அடுத்துப் பா, பாவினம் என்றிட
அங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்
எடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென
பண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்
யாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்!

எந்தன் எழுத்தும் "பா" ஆகாமலே
"பா" நடையிலே புனைவதனாலே
புதுப்பா என்றால் இப்படித் தானென
இணைய வழி, வலைப்பக்க வழி
புதுப்பா புனைவோரிடம் மோதவியலாது
பின்வாங்கும் எளியவன் ஆனாலும்
"பா" பற்றிய தகவலைப் பகிர்ந்தேனே!
---------------------------------------------------------------------------------------------
அடிபட்டால்...


அந்தக் காலத்தில
மணி (Bell) இல்லை, தடுப்பு (Break) இல்லை
அடிபட்டால் பல்லு இல்லையென
மிதிவண்டி (Bicycle) மிதித்த நினைவுகள்
இந்நாளும் உள்ளத்தில உருளுதே!
இந்தக் காலத்தில
அதிரொலி (Horn) இல்லை, தடுப்பு (Break) இல்லை
காற்றுக் கூட தடுக்க இயலாதென
அடிபட்டால் ஆளாளுக்கு உயிரில்லையெனை
அதிகூடிய குதிரை வலு கொண்ட
உந்துருளியில் (Moterbike) விரைவாகப் பயணிப்போமே!
காலம் மாறினாலும்
கடுகளவேனும் எண்ணிப் பாருங்கள்!
பிறரை வாழ வைக்கப் பிறந்த
நீ
பிறரைச் சாகடிக்காமலாவது
பயணம் செய்யலாமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!