Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 மார்ச், 2018

குழந்தை பெற்றுச் சாகடிப்பது காதலாகுமோ?


நம்பி நம்பி நடைபயின்றுச் சுற்றி
கம்பி வேலி கடந்துசென்று கைகுலுக்கி
தெருக்களிலும் பூங்காக்களிலும் நெருங்கிப் பழகி
காதலெனக் காமம் மேலிடக் கூடியதில்
பெண்ணுக்கு வயிறு பெருத்திடப் பார்த்து - கெட்ட
ஆணுக்கு அச்சம் முட்ட ஒளிந்தோட - ஒளிக்க
முடியாத நல்ல பெண்ணின் அறுவடையாக
தெருவோர, குப்பைமேடு குழந்தைகளின் நிலை!
"வெளுத்ததெல்லாம் வெள்ளையென நம்பி
பதிவுத் திருமணம் செய்யாது கூடியவளே - உன்
அழுக்ககலக் குழந்தையைப் பெற்று வீசலாமோ?
காமம் மேலிட்டதால் காதல் நீங்கிட - ஓடி
ஒழியும் காமவெறி ஆண்களே பதில்கூறுவீரா?" என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
"பொதுவெளியில் காமம் மேலிட அலைவதும்
பொதுவெளியில் பிள்ளை பெற்று வீசுவதும்
காதலென்ற போர்வையில் பண்பாட்டை மிதிப்பதும்
சுத்தமான காதலுக்கு அழுக்குப் பூசுவதும் - உங்கள்
செயல் என்றால் சாவை நாடலாமே! - ஏன் தான்
குழந்தையைப் பெற்றுவீசிச் சாகடிக்கிறீர்கள்?" என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
"இது தான் காதலா?" என்று கேட்டால்
இருபாலாரது பதிலும் வீசியெறிந்த குழந்தைகளா?

யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடவுள்ள "இது தான் காதலா?" என்ற மின்நூலுக்கு மேற்காணும் படத்திற்கு மேற்காணும் கவிதையை விடச் சிறந்த கவிதைகளை 20/03/2018 இற்கு முன் wds0@live.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பரிசில் விரிப்பை அறியலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!