Translate Tamil to any languages.

புதன், 25 அக்டோபர், 2017

தமிழில் பா/கவிதை புனைந்து காட்டுவோம்!

இலக்கியம் தோன்றிப் பின் தான்
இலக்கணம் தோன்றியது என்று தான்
எண்ணிப் பா/கவிதை புனையலாம் தான்
என்றும் எண்ணியதை எழுதலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்கள் தான்
தமிழாக இசைத்து ஒலிக்கத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

சீருக்குச்சீர் முதலெழுத்துப் பொருந்தத் தான்
மோனையென்று வந்தமையத் தான்
சீருக்குச்சீர் இரண்டாமெழுத்துப் பொருந்தத் தான்
எதுகையென்று வந்தமையத் தான்
"பாலைப் போல வெள்ளை" என்று தான்
உவமையென்று வந்தமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

உரைநடை அமைப்பை ஒதுக்கித் தான்
சுவைமிகு சொல்கள் வந்தமரத் தான்
எதுகை, மோனை, உவமை வரத்தான்
வாசகர் மீளமீள வாசிக்கச் சுகந்தான்
சுருங்கச் சொல்லி உணர்த்தத் தான்
உணர்வுகளின் மூச்சாக அமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

எழுதுகோல் ஏந்தினால் எவரும் தான்
எழுதினால் பா/கவிதை ஆகலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்களில் தான்
வடமொழி, பிறமொழிச் சொல்களும் தான்
சாட்டுக்குத் "Thanks" என ஆங்கிலமும் தான்
நுழைந்தே தமிழைக் கொல்லத் தான்
பா/கவிதை புனைவது ஆகாது தான்!

தமிழில் உலாவுவதும் பிறமொழிகள் தான்
தமிழருக்கு அத்தனையும் தெரியாது தான்
தெரிந்த நற்றமிழ் சொல்களில் தான்
தமிழர் வாழ்விடச் செய்திகளைத் தான்
சூழவுள்ள மக்கள் வாழ்வைத் தான்
தம்மெழுத்து நடையினில் சொல்லித் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

இலங்கை, யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் 21/10/2017 சனியன்று உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்கவிதை இடம்பிடித்துள்ளது.



மேலே குறிப்பிட்ட '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் பற்றிய எனது கண்ணோட்டத்தினை 24 நேரத்தில் மின்நூலாக்கி உள்ளேன். அதனைக் கீழே பார்வையிடலாம்.


பக்கம் பக்கமாக பிரட்டிப் பார்க்க

பதிவிறக்க

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!