Translate Tamil to any languages.

செவ்வாய், 25 நவம்பர், 2014

தீர்வு ஒன்று தேவை

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!
பிள்ளைகளின் விருப்பறியாது
பிள்ளைகள் எப்படியாது வாழுமென
பிள்ளைகள் கரை சேர்த்தால் போதுமென
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள்
எப்பதான் பின்விளைவை உணருவார்களோ?
பிள்ளைகளுக்கு
மகிழ்வான வாழ்வமைத்துக் கொடுக்க
பெற்றோர்களுக்கு
கற்றுக்கொடுக்க முன்வாருங்களேன்!

திங்கள், 24 நவம்பர், 2014

காதலை விட நட்பே பெரிது...

நட்புக்குப் அகவை வேறுபாடில்லை.
காதலுக்கு ஒத்த அகவை வேண்டும்.
காதலை விட நட்பே எளிதில் மலரும்...

நட்புக்குப் பால் வேறுபாடில்லை.
காதலுக்கு எதிர்ப்பால் வேண்டும்.
காதலை விட நட்பே இலகுவானது...

நட்பு எல்லோருக்கும் பொதுவானது.
காதல் இருவருக்கு உரித்தானது.
காதலை விட நட்பே பெரிது...

சனி, 22 நவம்பர், 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

புதன், 19 நவம்பர், 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

வேறுபாடு

தோள் கொடுப்பவன் தான் தோழன்
தோள் கொடுப்பவள் தான் தோழி
"ள, ழ வேறுபாடு"
 
தோள் கொடுக்காதவன் தான் நடிகன்
தோள் கொடுக்காதவள் தான் நடிகை
"ள, ட வேறுபாடு"