Translate Tamil to any languages.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாழ்பாவாணனுக்கு 'சொற்சுவைத் தேனி' விருது

இலங்கை - யாழ்ப்பாணம் - மாதகலில் இருந்து இயற் பெயர்: காசி.ஜீவலிங்கம்,  இலக்கியப் பெயர் (புனைபெயர்): யாழ்பாவாணன் ஆகிய நான் 1986, 1987 ்காலப் பகுதியில் இலக்கியம் படைக்கலாம் என முயன்று பார்த்தேன். சிறு நாடகம் முதலில் எழுதி, இயக்கி அரங்கேற்றினேன். எனது முதலாவது கவிதை 25/09/1990 யாழ் ஈழநாதம் ஏட்டில் வெளியானது. பின் வீரகேசரி ஏட்டிலும் வெளியானது. சில படைப்புகள் இந்திய மற்றும் இலங்கைத் தொகுப்பு நூல்களிலும்  வெளியானது. 2010 இலிருந்து இணைய வழியில் எனது படைப்புகளைப் பகிர்ந்து உலகலாவிய வாசகரைப் பேணி வருகிறேன். 

2020 தீநுண்மி (கொரோனா) தொற்றுப் பரவல் மற்றும் ஆள் முடக்கம் காலப் பகுதியில் இணைய வழிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அந்த வகையில் நானும் இரண்டாண்டுகள் இலக்கியப் பயிலரங்குகள் நடாத்தி வந்தேன். ஏனைய குழுக்களின் இணைய வழிக் கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியிருந்தேன். அந்த வகையில் இந்திய-தமிழக தேனித் தமிழ்ச் சங்கம் எனக்கு '‘சொற்சுவைத் தேனீ'' எனும்  விருதினை வழங்கியிருக்கிறது.

தேனித் தமிழ்ச்சங் கமேதந்த சான்றிதழ்
தேடியே வந்ததென் கைக்கு.
                   {இரு விகற்பக் குறள் வெண்பா}


மேற்படி விருது வழங்கியமையைத் தெரிவித்து மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்கள் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தங்களுக்கான பக்கம்:

சொற்சுவை விருதாளர்கள் பக்கம்:

இப்படி ஒரு நிகழ்வில் உரையாற்ற ஒழுங்கு செய்து தந்த பெரியோருக்கும் நிகழ்வில் பங்கெடுத்த பெரியோருக்கும் எனக்கான விருதினை என் கைக்குச் சேர்ப்பித்த மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் நான் பல சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலும் நான் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும் 'யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற வேண்டும்' என்ற நோக்கில் எனது பணியைத் தொடர ஊக்குவித்தாலும் என்னிடம பயன்பெற்று நிறைவடைந்த பயனாளர்களின் மகிழ்ச்சியை உள்ளத்தில் பேணுவதிலே நான் நிறைவடைகிறேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!