Translate Tamil to any languages.

புதன், 14 ஏப்ரல், 2021

பொறுக்கி யாழ்பாவாணனின் பகிர்விது

 


 

"உலகத்தைத் திருத்த விரும்பினால் முதலில் உன்னை திருத்திக்கொள். பின்பு உலகம் தானாகவே திருந்தும்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள் மக்களாயம் (சமூகம்) தானாகவே திருந்தி விடும்" என்றும் சுவாமி விவேகானந்தர் சொன்னதாகப் பின்பற்றப்படும் கருத்திது.

 

"மற்றவர்களின் தவறுகளைப் பேசிக்கொண்டு இருப்பது தான் நமது பெருந்தவறு." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதாகப் பின்பற்றப்படும் கருத்திது.

 

இவற்றைப் பொறுக்கிய சின்னப்பொடியன் யாழ்பாவாணன், தனது பாவண்ணத்தில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

 

பிறர்தவறைத் தான்பொறுக்கி நீபரப்பி நீகெடுவாய்

உன்தவறைத் தான்திருத்தி வாழ்

(இரு விகற்பக் குறள் வெண்பா)

 

உன்தவறைத் தான்திருத்து உன்னையே பார்த்து

பிறர்தம்மை மாற்றுவார் காண்

(இரு விகற்பக் குறள் வெண்பா)

 

பிறர்தான் திருந்திச் செயல்படப் பார்க்க

பிறர்பிழை தான்பிடிக்க வேண்டாம் - பிறருக்கு

நன்மைசெய்யின் தங்கள் பிழையைத் திருத்தினால்

நன்மையே வந்திடும் காண்.

(இரு விகற்ப நேரிசை வெண்பா)


சமகாலத்தில் பலர் எழுதிய கவிதைகளில் பொறுக்கிய பொருள் குறித்து புனைந்த பாவிது.

பேசப் பேசப் பேசலாம் இனிக்கவே

கேட்கக் கேட்கக் கேட்கலாம் குரலே

பார்க்கப் பார்க்கப் பார்க்கலாம் அழகே

நினைக்க நினைக்க நினைக்கலாம் உன்னையே!

                      (நிலை மண்டில ஆசிரியப்பா)

இப்படித்தான் எங்கெங்கோ பொறுக்கி எடுத்து ஆக்கிய பாக்களைத் தொகுத்து அச்சு நூலாக "யாழ்பாவாணன் கவிதைகள்" வெளிவந்திருக்கிறது. இந்திய விலை: 130/= இலங்கை விலை: 450/=

 


இந்நூலைப் பெற விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரியை (எண்: 0094703445441) signal, telegram, whatsapp, viber, imo ஊடாகவோ yarlpavanang1@gmail.com ஊடாகவோ அனுப்பினால் கடிதமூலம் அனுப்பிவைக்கப்படும்.

 

எனது வலைப்பூ, மின்னூல் வெளியீடு, இலக்கியப் போட்டிகள் நடாத்துவதோடு teamlink செயலி ஊடாக இணையப் பயிலரங்கம், கவிதை அரங்கேறும் நேரம், இணையப் பட்டிமன்றம் ஆகியவற்றைத் தொடருகிறேன். இந்தச் சித்திரைப் புத்தாண்டில் இருந்து நீங்கள் முன்னெடுக்கும் எல்லாச் செயல்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகளைப் பகிருகிறேன். இணையம் வழியே நற்றமிழைப் பேண உழைக்கும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!