Translate Tamil to any languages.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

காதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை!

அன்புக்கு மறுபெயர் காதல் என்பாங்க! வாழ்க்கைப் பயணம் இலகுவாக நகர "அன்பு" என்ற ஊக்க உணர்வு தேவை. அந்த ஊக்க உணர்வான அன்பு அதிகமாகப் பற்றுதல் அதிகமாகிறது. ஒருவர், ஒருவர் மீது வைத்திருக்கும் பற்றுத் தான் "காதல்" எனலாம். அதாவது அதிக அன்பு காட்டுதலைக் "காதல்" என்று சொல்லலாம். அதிக அன்பு காட்டுதலால் ஒருவரது உள்ளத் தாழ்ப்பாளைத் (கதவைத்) திறக்க முடிகிறது. அதனால் தான் "அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!" என்பாங்க! இவ்வாறான காதல் இயற்கையாக அமையும். இவ்வாறு அமைந்த காதல் இணையர்களுக்குச் சோதிடத்தில் குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்.


சமகாலத்தில் (2000 இன் பின்) திரைப்படப் பாணியில் "காதல்" என்ற போர்வையில் நல்லுறவுகள் கெட்டுப் போகின்றன. "கண்டதே காதல் கொண்டதே கோலம்" என்ற நாடகமல்லவா அரங்கேறுகிறது. இன்றைய இளசுகள் நடித்துக் காட்டுவது "காதல்" என்றால் என்னவென்று அறியாத தெருக்கூத்துத் தானே! இந்நிலை குமுகாயத்தில்/ மக்களாயத்தில (சமூகத்தில) பல கெடுதல்களை விளைவிக்கின்றன.

அப்படியொரு கெடுதல் 'தற்கொலை செய்தல்' எனலாம். இன்னொரு கெடுதல் 'கருக்கலைப்பு' எனலாம். அடுத்தொரு கெடுதல் "குழந்தையைப் பெற்றுத் தெருக் குப்பையில் இடுதல்" எனலாம். இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து "இது தான் காதலா?" என்ற தலைப்பில் மின்நூல் வெளியிடுவதோடு மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவதாகவும் அறிவித்துள்ளோம். தாங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 28-02-2018 என்பதனை நினைவூட்டுகிறோம்.

கவியரசர்களே!
கவிமன்னர்களே!
கவிவேந்தர்களே!
கவிக்கோக்களே!

உங்கள் கவித்திறனை வெளிக்காட்ட நல்ல களம். உடனே உங்கள் கவிதைகளை கீழ்வரும் இணைப்பில் தெரிவித்தவாறு அனுப்பி வைக்கவும்.

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!