Translate Tamil to any languages.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01

நான் பாடத்தான் விருப்பம்
ஆனால்,
எனக்குப் பாட்டுப் பாட முடியாதே...
ஆதலால்,
நான் எழுதுவதை ஏற்றுவிட்டேன்!
நான் எழுதியது எல்லாம்
நான் படிக்க
அழகாய் மின்னினாலும் கூட
வாசகர் எண்ணத்தில்
நிறைவு ஏற்பட்டதாய் நானறியேன்!
ஏனெனில்,
எனது வலைப்பூவில்
பின்னூட்டம் எதுவும் கிட்டவில்லை!
நான்
வாசகர் எதிர்பார்ப்பை உள்வாங்கி
எழுதத் தொடங்கிய பின்னரே
பின்னூட்டம் அதிகமாய்
என் பக்கம் எட்டிப் பார்த்தது!
ஓ! உறவுகளே!
தங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்...
என்றாலும்
வாசகர் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து
ஏற்ற இலக்கியமாகப் படைத்தால்
சிறந்த படைப்பாளியாக - நீங்களும்
உலகில் உலா வரலாம் வாங்க!

படைப்பு என்பது ஆக்குவது அல்ல
படைப்பு என்பது
படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்று - அவர்
கைவண்ணமாகவோ நாவண்ணமாகவோ
வெளிவரவேண்டுமே! - அதற்கு
அதாவது, உள்ளத்தில்
படைப்புகள் கருவுறச் செய்ய
தேடல்கள் தேவை என்பேன்! - அத்தேடல்
உங்கள் உள்ளத்தில் உரசினால் தான்
படைப்புகள் கருவுறும் என்பேன்! - நான்
சென்னையில் இருந்து ஆழப்புலா வரை
புகைவண்டியில் சென்றவேளை கண்டேன்
பலர் ஏழைகளாகத் தெருவழியே...
என் உள்ளமும் நான் பார்த்ததும் (என் தேடலும்)
இரண்டறக் கலந்தமையால்...
"ஏழைகளற்ற நாடு தான்
தன்நிறைவு கண்ட நாடு...
தன்நிறைவு காணத் தான்
ஏழைகளும் வாழ்வில் மேம்படத் தான்
அரசு கவனம் எடுக்குமா? " என்ற
என் படைப்புக் கருவுற்றதே!
சரி! சரி! - இனி
நீங்களும் படைப்புகளை ஆக்கி
தளத்தில் போடலாம் தானே!

வலைப்பூக்களில் (Blog) - இன்று
ஏதாவது பதிவு இட்டீர்களா?
இல்லையா?
அப்ப - நகைச்சுவை
ஒன்றைப் பதிவு செய்யுங்களேன்!
நகைச்சுவை எழுத வராதா?
இதோ
வழிகாட்டுகிறேன்; எழுதுங்க...
"உண்மையை
கொஞ்சம் கூட்டியோ
கொஞ்சம் குறைத்தோ
எழுதிப்பாருங்க - அப்ப
நகைச்சுவை தானாகவே வரும்!" என
இந்திய (All India) வானொலியில் சொல்ல
நான் படித்தேன்; பகிருகிறேன்!
நண்பர் ஒருவர்
"மின்ன மின்ன
அணிகலன் அணிந்தவளை
மெள்ள அணைத்தால்
பணக்காரன் ஆகலாம்!" என்றான்...
அதைக்கேட்ட அடுத்தவன்
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல
ஆகையால் - நீ
பிச்சைக்காரன் ஆவாய்!" என்றான்...
தோழி ஒருத்தி
"ஏன்டி - அவனை
காதலிக்க மாட்டேன் என்கிறாய்?" என்றாள்...
அதைக்கேட்ட அடுத்தவள்
"அவருடைய மகள் தான்
என்ர வகுப்பில படிக்கிறாளே
ஆகையால் - நான்
காதலிக்க மாட்டேன்!" என்றாள்...
இவை
என் கிறுக்கல் தான்...
சிந்திக்க வைக்கிறதோ
சிரிக்க வைக்கிறதோ
எனக்குத் தெரியாது...
ஆனால்,
சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பது
நகைச்சுவை என்பேன்!
நீங்க
எங்க தான் ஓடுறியள்?
உங்கள் வலைப்பூக்களில் (Blog)
பதிவு எழுதத் தான் போறியளோ!
வாழ்த்துகள்!

நாளை
நன்நாளாக விடியப் போகிறது - அதை
இன்றே - நல்வழியில்
பயனீட்டத் திட்டமிடுவோம் - அதற்காக
நேற்றுச் சேமித்து வைத்ததை - அப்படியே
செலவு செய்யாமல் மீளச் சேமி...
ஏனெனில்
நாளைக்கு அடுத்த நாள் என்ற
ஒன்று இருப்பதை - நீங்கள்
நேற்று முன்றைய நாள்
எப்படியாவது படித்திருப்பியளே!
ஆனால் - எந்நாளும்
எவருக்கும் பொன்நாள் தான் - எதற்கும்
சேமிப்பும் திட்டமிடலும் பேணும்
ஒவ்வொருவருமே
வாழ்வில் வெற்றி நடை போடுகின்றனரே!
ஓ!
வாழ்க்கையைப் படம்பிடித்து
வெளிப்படுத்துவது போல
எழுதினாலும் கூட இலக்கியமே!

மக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!