Translate Tamil to any languages.

புதன், 31 ஜூலை, 2013

நம்மூரைப் போல வருமா?

ஒரு நாளும் காணாத
தெருமுகம் தான்
அவன்!
அண்ணே! அண்ணே!
நாலு காசு
கொடுங்க அண்ணே...
போக்குவரவுக்குப் பணம்
இல்லாமல்
செய்திட்டாங்கண்ணே!
அடிக்கடி
படிக்கத் தோன்றும்
அவன் வரிகள்!
உறவுக்காரங்க
விறகுக்கட்டை போல
இருந்துட்டாங்கண்ணே!
ஊரில என்றால்
பச்சைத் தண்ணியோட
காலம் போயிருக்கும்...
வேற்றூரில
மாற்றினத்தின் முன்னே
என்னை நம்ப எவருமில்லாத
இவ்விடத்தில
இருக்க வழியில்லாமல்
ஊருக்குப் போக உதவுங்கண்ணே!
அடுத்துத் தொடுத்துச் சொன்ன
அவ்வளவும் - என்
உள்ளத்தைத் தைத்தது!
நானோ பிச்சைக்காரன்...
கட்டைக் கால்
சட்டைப் பைக்குள்ளே
கையை விட்டு
கைப்பிடி குற்றிக் காசுகளை
அள்ளிக் கொடுத்தேன்!
"எந்த ஊரானாலும்
நம்மூரைப் போல வருமா?
எந்நாடானாலும்
நம்நாட்டுக்கு ஈடாகுமா?"
என்றாடிப் பாடி
ஊருக்குப் போற பேருந்தில
துள்ளிப் பாய்ந்தேறினான்
அந்தத் தெருமுகம்!

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!