மாமரத் தோப்புக்குள்ளே
(மச்சாளைப்)
சாப்பிட்டதும் போன மச்சாள்
கூப்பிட்டதும் வரவில்லையே
(சாப்பிட்டதும்)
மூக்கு முட்டச் சாப்பிட்டாங்க
சமிபாடடைய நடந்து போனாங்க
மாம்பழமாம் பிடுங்கப் போனாங்க
வீட்டுக்குத் திரும்பி வரவில்லையே!
(மச்சாளைப்) (சாப்பிட்டதும்)
தோழி வீட்டுக்குப் போனாங்களா
மாமன் வீட்டுக்குப் போனாங்களா
சின்ன மச்சானோட ஓடிப் போனாங்களா
யாராச்சும் கண்டால் கூட்டி வாங்கோ
(மச்சாளைப்) (சாப்பிட்டதும்)
அறிவுக் களஞ்சியம் எனக் கட்டினேனங்க
அழகுப் பதுமை எனக் கட்டினேனங்க
வருவாயைப் சேமிப்பாள் எனக் கட்டினேனங்க
எங்கேனும் கண்டால் கூட்டி வாங்கோ
(மச்சாளைப்) (சாப்பிட்டதும்)
சாப்பாடு செமிக்க நடை போட்டவங்க
கூப்பாடு போட்டும் வீட்டுக்கு வரேலைங்க
தாலிகட்டிய மச்சான் எனக்கோ துன்பமங்கோ
கேலி பண்ணாமக் கண்டால் வரச் சொல்லுங்கோ
(மச்சாளைப்) (சாப்பிட்டதும்)
ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)