Translate Tamil to any languages.

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஊடகங்களில் தவறு செய்தால் சிக்கல் வரும்

 ஊடகங்களில் பணியாற்றுவது என்பது கத்தியின் கூர் விளிம்பில் கால் வைத்து நடப்பது போன்று இருக்கும்.  இது அச்சு ஊடகத்திலும் சரி மின் ஊடகத்திலும் சரி இன்றைய சமூக ஊடகத்திலும் சரி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 


எனவே யூடியூப், டிக்டாக் ஊடாக எந்த காட்சி அமைப்பையும் வெளியிடும் போது மாற்றாரைப் புண்படுத்தும் படி வெளியிடுவதாய் இருக்கக்கூடாது. உலகம் உங்களை ஒரு நாள் ஒதுக்கி வைக்கும். சட்டம் ஒரு நாள் உங்களை சிறையில் அடைக்கும். ஆகவே,  நீதி, தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகங்களில் பணியாற்றுவது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

youtuber ஒருவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக இப்பதிவைப் பகிருகின்றேன்.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

 யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

    (பல விகற்ப இன்னிசை வெண்பா)



தொற்றுநோய்தான் காற்றிலிடக் குப்பைதான் போடுவார்தான் 

கற்றவரும் மற்றவரும் தான்தெருவில் போடுவார்தான் 

யார்தான் அயலாரும் தான்தமிழர் என்றுணர்வார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


பேச்சிலதான் தேன்போலத் தித்திக்கச் சொல்லலாமே

பேச்சிலதான் நல்லுறவும்  தான்பிரியத் திட்டலாமே 

யார்தான் உணர்ந்தும்தான் நற்றமிழில் பேசுகின்றார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


வெளியீடு சொல்லவேணும் ஈழவரின் ஆக்கமென்று

நம்எழுத்துச் சொல்லவேணும் நம்மவரின் நற்பெயரை

யார்தான் பிறமொழி சேர்த்தெழு தாதவராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


அடையாளம் சொல்லவேணும் நாம்ஈழத் தாரென்றாம்

நம்பேச்சுச் சொல்லவேணும் நம்தமிழ்வ ளம்இதுவாம்

யார்தான் செயலளவில் தாம்கடைப்பி டிக்கிறாராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


தமிழர் அடையாளம் தான்அழியப் போகிறதே

நம்தமிழ் தன்வளம் குன்றத்தான் போகிறதே

யார்தான் கணக்கில் எடுத்துணர்ந்து ஒன்றிணைவார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.

சனி, 18 ஜனவரி, 2025

2025 தைப்பொங்கல் ஒரு பார்வை

 


தைத்திருநாள் சொல்லும் செய்தி என்ன
இத்தரைக்கு ஒளிதரும் பகலவனுக்குத் தான்
நெல்லறுவடை நாள்கண்டு  புத்தரிசி குத்தியெடுத்து
இல்லங்களில் பொங்கிப் படைத்து நன்றிகூறவே!

---------
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
----------
பொங்கல் பொங்கல் என்று
பொங்கலும் வந்து போயிட்டு!
எங்கள் நன்றியைத் தெரிவித்தோம்
எங்களுக்கு ஒளிதரும் பகலவனுக்கு!
இந்தத் தையில் இருந்தாவது
எந்தன் உறவுகளைப் பலப்படுத்துவதே
இனியெங்கள் வேலையாகட்டும்!


செவ்வாய், 14 ஜனவரி, 2025

2025 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்



தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
 

வியாழன், 9 ஜனவரி, 2025

அடிக்கடி நினைவுக்கு வரும் வன்னி




நான்

செத்து செத்து உயிர்த்து வந்த கதையை சொல்ல வந்தேன்! புதுக்குடியிருரப்பில் இருந்து வந்தேன்
ஒட்டுசுட்டான் பக்கமாக வந்த வெடித்த
எறிகணைத் துண்டுகள் பல
என் வீட்டிற்குள்ளும் பாய்ந்தன...
ஒன்று முற்றத்துப் பலா மரத்தில் இருந்த
பலா  பழத்தைக் கீறிக் கிழித்தது!
இன்னொன்று முற்றததில் நின்ற
உந்துருளியின் எரிபொருள் தாங்கியை
உரசிக் கொண்டு போனது!
வேறு சில வீட்டுக் கூரையை
கிழித்துக் கொணடு போனது!
வீட்டிற்குள் உறங்கிய என்னையும் இல்லாளையும்
குத்திக் கிழித்து உயிர் குடிக்காமல் போக
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் குடியிருக்கும்
காட்டு ஆமணக்கு விநாயகர் தான்
காப்பாற்றியது என்று இன்றும் அழுகின்றோம்!
தமிழன் உயிர்களைக் குடிக்கும்
கொத்துக் (கிளஸ்டர்) குண்டுகளுக்கும்
தமிழன் உடைமைகளை எரிக்கும் நெருப்புக்  (பொஸ்பரஸ்) குண்டுகளுக்கும்
முகம் கொடுக்க முடியாமல்
ஊர் ஊராகப் பாதுகாப்புத் தேடி அலைந்தோம்!
போகும் வழிகளில் பிணங்களைக் கடந்து
போய்க் கொண்டு இருக்கும் போது
சூட்டுச் சத்தம், குண்டுச் சத்தம் கேட்க
பத்தாப்பளைக் கண்ணகி அம்மாவே
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரே
எங்களைக் காப்பாற்று என்றழுதுகொண்டு
போய்க் கொண்டிருக்கையிலும்
நாம் கடந்த பின் எமக்குப் பின்னே
நாம் வந்த வழியில் குணடுகள் வெடித்தன...
அம்மோய் அப்போய் என்றழும
உறவுகளின் குரல்களும். காதைக் கிழித்தேன்...
நிப்பாட்பாத நிப்பாட்டாத - அடுத்த
குண்டு விழுந்தால் நாங்கள் செத்துப் போவோம்
என்றழும் இல்லாள் பேச்சுக் கேட்டு
என் உந்துருளியை முறுக்கிச் சென்றேன்!
இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை,
சாளம்பன், இரட்டை வாய்க்கால்,
முள்ளிவாய்ககால், வாட்டுவாகல் என
பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் தேடி அலைந்தோம்!
முள்ளிவாய்க்கால் தள்ளி வந்து
வட்டுவாகல் நெருங்கு முன்
ஆங்கோர் இடத்தில் கிடந்த வேளை
அரூகே வந்தாங்கே வெடித்த குண்டால்
உடல் சிதறிப் பல உயிர்கள் பிரிய
பிள்ளையாரோ சிவபெருமானாரோ
இயேசுநாதரோ/கர்த்தரோ அல்லாஹ்வோ
எல்லா மதங்களும் சுட்டும் கடவுள்
என்னையும் இல்லாளையும் காப்பாற்றினார்!
வன்னி மண்ணில் போர்ச் சூழலில்
நாம் வாழ்ந்த வாழ்க்கை நிலை எழுத
உலகளவுத் தாளும் வானுயர்ந்த எழுதுகோலும்
போதாது போதாது - எமது
வாழ் நாளில் எழுதி முடிக்கவும்
இயலாது இயலாது - அந்த
கடவுள் தான் நீண்ட ஆயுளும்
தரவேண்டும்!