கடவுள் என்றாலும் கூட
எமது உள்ளத்தில் எடுக்கும் முடிவே
எமது பயணத்தைத் தீர்மானிக்கும்!
எமது உடலுக்கு உள்ளே
சிறு காற்றுப் (சுவாசப்) பை - அதனுள்ளே
இருக்கக்கூடிய காற்றே (உயிர் / ஆன்மா)
எம்மை இயக்குகின்றதாக - கோவிலில்
சமயப் பேச்சாளர் சொன்ன நினைவு!
நம்முடலே காற்றடைத்த பையடா!
காற்றுப் போனால் (உயிர் பிரிந்தால்)
பெறுமதியில்லாச் சடப்பொருள் தானடா!
என்றெல்லோ
என் பீட்டப்பன் சா வீட்டில்
என்னப்பன் எனக்குரைத்தான்!
ஆடுகின்ற ஆட்டமும் போடுகின்ற கூத்தும்
காற்றுப் (மூச்சுப்) போகும் வரை தான்...
காற்றடைத்த பையாம் - எம்முடல்
காற்றுப் போகும் முன்னரே
உறவுகளை அன்பாகப் பேணுவோம்
ஊருக்கு நல்லது செய்வோம் - எல்லாம்
காற்றுப் போன எம்முடல் நாறும் முன்
சுடுகாட்டுக்கோ இடுகாட்டுக்கோ
கொண்டு போய்ச் சேர்த்து அழிக்கவே!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(காசி.ஜீவலிங்கம்)
இலங்கை.
=============================
ஒளி ஏற்றி இருள் விலக்கும்
துளி கூடத் தீயது ஒட்டாமல்
கோடி உடுத்தி கோடிட்டுக் சொல்லு
தீபாவளி நன்மை செய்யச் சொல்லும்
தீபாவளி நாளில் நன்மை செய்வோம்.
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் பகிர்வோம்!
இயலாதோர் அன்புடன் மாற்றாரை அழைத்து
தீபாவளி வாழ்த்துகள் பகிர்ந்து
எல்லோருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்
தீபாவளித் திருநாள் ஆகட்டும்!