ஊடகங்களில் பணியாற்றுவது என்பது கத்தியின் கூர் விளிம்பில் கால் வைத்து நடப்பது போன்று இருக்கும். இது அச்சு ஊடகத்திலும் சரி மின் ஊடகத்திலும் சரி இன்றைய சமூக ஊடகத்திலும் சரி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
எனவே யூடியூப், டிக்டாக் ஊடாக எந்த காட்சி அமைப்பையும் வெளியிடும் போது மாற்றாரைப் புண்படுத்தும் படி வெளியிடுவதாய் இருக்கக்கூடாது. உலகம் உங்களை ஒரு நாள் ஒதுக்கி வைக்கும். சட்டம் ஒரு நாள் உங்களை சிறையில் அடைக்கும். ஆகவே, நீதி, தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகங்களில் பணியாற்றுவது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
youtuber ஒருவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக இப்பதிவைப் பகிருகின்றேன்.