Translate Tamil to any languages.

திங்கள், 14 ஏப்ரல், 2025

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

 


விசுவாவசு 2025 சித்திரை வருடப் பிறப்புப் பலன் 

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு

துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் - 2 வரவு 14 செலவு

தனுசு - 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

செலவைக் குறைத்து வரவைப் பெருக்கப் பார்க்கவும்.





சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

மோதலும் காதலும்

ஒரு பெண்ணுக்கும்
ஒரு ஆணுக்கும்
ஒரு பெரிய மோதல்! - அது
காதலைச் சொல்லப் புறப்பட்ட போது 
ஏற்பட்ட மோதல்!

என் அழகில் மயங்கி விழுந்தாயா?
எந்தன் அப்பனாத்தை
சேர்த்து வைத்திருக்கும்
சொத்தில் மயங்கி விழுந்தாயா 
என்கிறாள் பெண்!

என் உழைப்பில் மயங்கி விழுந்தாயா?
என்னை அடைந்தால்
எல்லாம் கிடைக்கும் என்று
நம்பி வந்தாயா என்கிறான் ஆண்!

மோதலின் பின் கொஞ்சம் புரிதலும்
ஏற்படத்தானே செய்யும்!

நீண்ட காலம் பழகியதன் விளைவு
இப்படித்தான் இருக்கும் என்று
நான் அறிந்திருக்கவில்லை!
என் மீது தப்புக் கணக்கா
உன் மீது தப்புக் கணக்கா
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!

என் எதிர்பார்ப்பு இவ்வளவுதான்
அதுபோல
உன் எதிர்பார்ப்பும் இருக்குமாயின் 
இணைந்து பயணிக்கலாம் என்று
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!

ஒரு கணப்பொழுது மௌனத்தின் பின்
ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டதற்குச் சான்றாக
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்!
அடுத்தது என்ன?
அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது!

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஊடகங்களில் தவறு செய்தால் சிக்கல் வரும்

 ஊடகங்களில் பணியாற்றுவது என்பது கத்தியின் கூர் விளிம்பில் கால் வைத்து நடப்பது போன்று இருக்கும்.  இது அச்சு ஊடகத்திலும் சரி மின் ஊடகத்திலும் சரி இன்றைய சமூக ஊடகத்திலும் சரி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 


எனவே யூடியூப், டிக்டாக் ஊடாக எந்த காட்சி அமைப்பையும் வெளியிடும் போது மாற்றாரைப் புண்படுத்தும் படி வெளியிடுவதாய் இருக்கக்கூடாது. உலகம் உங்களை ஒரு நாள் ஒதுக்கி வைக்கும். சட்டம் ஒரு நாள் உங்களை சிறையில் அடைக்கும். ஆகவே,  நீதி, தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகங்களில் பணியாற்றுவது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

youtuber ஒருவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக இப்பதிவைப் பகிருகின்றேன்.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

 யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

    (பல விகற்ப இன்னிசை வெண்பா)



தொற்றுநோய்தான் காற்றிலிடக் குப்பைதான் போடுவார்தான் 

கற்றவரும் மற்றவரும் தான்தெருவில் போடுவார்தான் 

யார்தான் அயலாரும் தான்தமிழர் என்றுணர்வார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


பேச்சிலதான் தேன்போலத் தித்திக்கச் சொல்லலாமே

பேச்சிலதான் நல்லுறவும்  தான்பிரியத் திட்டலாமே 

யார்தான் உணர்ந்தும்தான் நற்றமிழில் பேசுகின்றார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


வெளியீடு சொல்லவேணும் ஈழவரின் ஆக்கமென்று

நம்எழுத்துச் சொல்லவேணும் நம்மவரின் நற்பெயரை

யார்தான் பிறமொழி சேர்த்தெழு தாதவராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


அடையாளம் சொல்லவேணும் நாம்ஈழத் தாரென்றாம்

நம்பேச்சுச் சொல்லவேணும் நம்தமிழ்வ ளம்இதுவாம்

யார்தான் செயலளவில் தாம்கடைப்பி டிக்கிறாராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


தமிழர் அடையாளம் தான்அழியப் போகிறதே

நம்தமிழ் தன்வளம் குன்றத்தான் போகிறதே

யார்தான் கணக்கில் எடுத்துணர்ந்து ஒன்றிணைவார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.

சனி, 18 ஜனவரி, 2025

2025 தைப்பொங்கல் ஒரு பார்வை

 


தைத்திருநாள் சொல்லும் செய்தி என்ன
இத்தரைக்கு ஒளிதரும் பகலவனுக்குத் தான்
நெல்லறுவடை நாள்கண்டு  புத்தரிசி குத்தியெடுத்து
இல்லங்களில் பொங்கிப் படைத்து நன்றிகூறவே!

---------
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
----------
பொங்கல் பொங்கல் என்று
பொங்கலும் வந்து போயிட்டு!
எங்கள் நன்றியைத் தெரிவித்தோம்
எங்களுக்கு ஒளிதரும் பகலவனுக்கு!
இந்தத் தையில் இருந்தாவது
எந்தன் உறவுகளைப் பலப்படுத்துவதே
இனியெங்கள் வேலையாகட்டும்!