பாடல்: மாதகல் ஊரைப் பாடு
இணைப்பு: https://suno.com/s/esvIqMVPEKOWtBZd
பாடலாசிரியர்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
பாடி, இசைத்தது:Suno(.com) AI Music App
தலைப்பு: மாதகல் ஊரைப் பாடு
எந்தன் ஊர் மாதகல் ஊர் என்பேன்
சொந்த உறவுகள் நிறைந்த ஊர் என்பேன்
(எந்தன்)
மாதகல் ஊரின் அழகும் சிறப்பு என்பேன்
மாதகல் ஊரின் வளமும் சிறப்பு என்பேன்
(மாதகல்)
சம்பில் துறை, மாத்துறை, கெவிமாதா கோவில் கரைக்கு
கரையைத் தேடும் நுரை தள்ளும் அலை
இரவில் தேறை, முரல் மீன் தரும் கடல்
இந்தியக் கோடியாக்கரை தழுவும் மாதகல் கடல்
மாதகல் ஊராருக்கு வாழ்வுதரும் கடல்வளமாம்
(எந்தன்) (மாதகல்)
வெளிப்புலம், கிழுவைநாட்டி மேற்குக் கரை
காடாப்புலம், உப்புத்தரவை கிழக்குக் கரை
வவுணை, காஞ்சிபுரம் வடக்குக் கரை
பாணாகவெட்டி அம்மனுக்கு அப்பால் தெற்குக் கரை
வேளாண்மை விளைச்சல் தரும் நிலவளமாம்
(எந்தன்) (மாதகல்)
இந்துக் கோவில், கத்தோலிக்க ஆலையம் சூழ
எந்தக் குறையும் இன்றி ஒன்றுபட்டு வாழ
கூறுபோட்டுப் பிரியாது ஒன்றுபட்டு வாழத்தான்
அன்பும் பணிவும் நிறைந்த ஊர் மக்கள்
அறிவும் ஆற்றலும் நிறைந்த ஊர் மக்கள்
உலகை வியக்க வைக்கும் மாதகல் ஊரைப்பார்
(எந்தன்) (மாதகல்)