Translate Tamil to any languages.

ஞாயிறு, 2 நவம்பர், 2025

ஒரு நாளைக்கு ஒரு தடவை படியுங்கள்

 

நாம் சாவடைந்தால்

நாறும் நம் உடலைக் காவ

நாலு உறவுகள் இல்லாத வேளை

படிப்பு, பணம், நிலம்,

பொன், பொருள், சொத்து 

எல்லாம் இருந்தென்ன பயன் காணும்?

கத்தியால இரண்டாக வெட்டிய

ஒற்றை வாழைப்பழத்தை 

ஒன்றாக்க முடியாதது போலத் தான் 

முறிந்த உறவுகளையும் சேர்க்க முடியாதே!

முரண்படாமல், விரிசல் ஏற்படாமல்,

வெறுப்பை விதைக்காமல் 

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் என

உறவுகளைப் பிரியாமல் முறியாமல் பேண

அன்பாலே ஒட்டி உறவாடி அணைக்கலாமே!