Translate Tamil to any languages.

சனி, 3 ஆகஸ்ட், 2019

கதையும் விதையும் தானாம் கவிதை


1 - கவிதையா?
 
கதை + விதை = கவிதை என
மூத்த அறிஞரொருவர்
அரங்கொன்றில் அறிவித்தார் - அதை
நானும் கையாள முயன்று பார்த்தேன்!
ஏழை வீட்டில் ஒளி இல்லை
ஏழை வயிற்றில் உணவில்லை
மழை வந்தால் நனையும் நிலை
இது ஒரு ஏழையின் கதை!
கடவுள் போலச் சிலர்
ஏழைக்கு உதவினாலும் கூட
கடவுளாகவே வந்து ஒருவர்
"இனி நீ ஏழையாக இருக்காதே!" என
தொழில் வாய்ப்பை வழங்கிச் சென்றமை
நல்ல விதையாகப் பார்க்கின்றேன்!
கதை சொல்லி
நல்ல விதை சுட்டி
சொல்லழகு காட்டிவிட்டேன்
மெல்ல நீங்கள்
நானெழுதியதைக் கவிதை என்பீர்களா?

2 - கவிதையாமோ?

இளமை முத்தி வெளிப்பட்ட வேளை
காளையும் வாலையும் ஓடிப்போய் வாழ
காலந்தான் கரைந்தும் மாற்றம் மலர
காளையின் வயிறு ஒட்டிப் போக
வாலையின் வயிறு பெருத்து வீங்க
பட்டினி வாழ்வு தொடரும் கதையது!
காலம் கடந்து எண்ணிப் பயனென்ன
உறவுகள், நட்புகள் உதவினாலும் கூட
ஒருவர் காளைக்குத் தொழில் வழங்கி
பட்டினி வாழ்வைத் தொடராமல் செய்தது
இளசுகளின் வாழ்வுக்கு போட்டநல் விதையது!
ஒரு கதை ஒரு விதை சொல்லி
சொல்களை அப்படி இப்படிப் போட்டு
கவிதை பாட முயன்று இருக்கிறேன்!
கதையும் விதையும் கூடி வந்தால்
கவிதை கைகூடுமாம் இப்படித் தானோ?

2 கருத்துகள் :

  1. கடவுளாகவே வந்து ஒருவர்
    "இனி நீ ஏழையாக இருக்காதே!" என
    தொழில் வாய்ப்பை வழங்கிச் சென்றமை
    நல்ல விதையாகப் பார்க்கின்றேன்!

    - என்ற வரிகள் உண்மையைப் பிரதிபலிப்பவை.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!