Translate Tamil to any languages.

சனி, 9 ஏப்ரல், 2016

அறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்

ஒரு வெளியீட்டாளரின் எண்ணத்தில் வாசகர் உளநிறைவைத் தரும் நூல்களையே வெளியிட்டுதவ முன்வருவார். நூல் ஆசிரியர்களோ தங்கள் எண்ணங்களை வெளியிட முன்நிற்பர். வாசகரோ தங்கள் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்ற நூல்களையே வாங்க முயற்சிப்பர். இந்த மும்முனைப் போருக்குள்ளே ஒரளவேனும் உடன்பாடு எட்டப்பட்டாலே ஒரு நூல் அச்சிட்டு வெளிவரமுடிகிறது. வெளியீடு இப்படி என்றால், ஒரு நூலை ஆக்கி முடிக்க எப்படி எல்லாம் நூல் ஆசிரியர் முகம் கொடுத்திருப்பார்.

ஒரு நூலை ஆக்கி முடிக்க இப்படி என்றால், பல நூலை ஆக்கி வெளியிட்ட அறிஞர் எவ்வளவு முகம் கொடுத்திருப்பார். அவரது திறமை, தன்னம்பிக்கை இரண்டுமே அந்நூல்களுக்கான முதலீடு என்பேன். அதிலும் சிறப்பு என்னவென்றால் படைத்துறை (இராணுவ) அறிஞர் எழுதிய நூல்களை வெளியிட்டுதவ முன்வந்த வெளியீட்டாளர்களை நான் பாராட்டியே ஆகவேண்டும். திறமை, தன்னம்பிக்கை இரண்டையும் முதலீடாகக் கொண்டு தனது எண்ணங்களை வெளியிட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிய தகவலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரது நூல்களைத் தாங்களும் வேண்டிப் படித்துப் பகிருவீர்கள் என நம்புகின்றேன்.

பெண்ணொருத்தி குழந்தை பெற்றெடுக்கும் வரையான துன்பங்களை விட, நூல் ஆசிரியர் நூலொன்றை ஆக்கி முடித்து,  வெளியிட்டு, வாசகர் கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வரையான துன்பங்கள் அதிகம் என்பர். ஆயினும் குழந்தையைப் பெற்றெடுப்பவளே அதிக துன்பங்களை அடைகின்றாள். எப்படி இருப்பினும் அச்சு நூல் வெளியீடு என்பது பல துன்பங்களைக் கண்டே இடம்பெறுகிறது. அப்படிப் பல தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பல அச்சு நூல்களை வெளியீட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிக் கீழே விரித்துப் படியுங்கள்.



இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.


எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

5 கருத்துகள் :

  1. இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.

    விரைவாக வெளியிடுங்கள் நண்பரே
    தகவலுக்கான காத்திருப்புடன் நாங்கள்...

    பதிலளிநீக்கு
  2. அவரது முயற்சி பாராட்டத்தக்கது. அவரது முயற்சியைப் பகிர்ந்த தங்களுக்கு மனமுவந்த பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி நண்பரே தங்களுக்கு எமது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான நூல்கள். கர்னல் அவர்கள் போற்றுதலுக்குரியவர். தங்கள் முயற்சியும் மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!