சுய(தன்) மருத்துவம் கூடாது.
மருந்து விற்பனை நிலையங்களில் நோயைச் சொல்லி மருந்து வாங்கக்கூடாது. என்றெல்லாம் பெரியோர் உங்களுக்குச் சொல்லித் தந்திருப்பர்.
சமூக ஊடகங்களில் மருந்துப் பொருள் விளம்பரம் அதிகம். அதனை நம்பி மருந்து வாங்கிப் பாவிக்கக்கூடாது.
தங்கள் நோய்க்கு மருந்தா?
விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோயா?
சிந்தித்துப் பாருங்கள்.
தங்கள் நோய்க்கு மருந்து தேவையாயின் மருத்துவரை நாடுங்கள்.
விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோய் வந்ததாகக் கருதினால் சாவு தான் வரும்.
விளம்பரதாரரோ மருந்துக் கடைக்காரரோ தெருவோர வழிகாட்டியோ தங்கள் உடலைப் பரிசோதித்து எந்த நோய்? எப்படி வந்தது? எந்த மருந்து, தங்கள் உடலுக்கு ஒத்துழைக்கும்? என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டார்களே! இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர் ஒருவராலேயே தீர்வு தரமுடியும்.
சிந்திக்க ஒரு மணித்துளி (நிமிடம்)!
மருத்துவரை அணுகித் தங்கள் நோயை விளங்கப்படுத்தி, மருத்துவ சோதனைகளைச் செய்து, மருத்துவர் கூறும் வழிகாட்டலின் படி மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதே நீண்ட ஆயுளுக்கு வழி! நானும் மருத்துவரை நாடி மாற்றார் நோயின்றி நீடூழி வாழ வழிகாட்டும் ஒருவர் என்பதனால் இதனைப் பதிவு செய்கிறேன்.
எனது கருத்தை ஏற்றுக்கொண்டால் இப்பதிவைப் பலருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
காசி.ஜீவலிங்கம் (யாழ்ப்பாவாணன்) +94703445441
