ஒரு பெண்ணுக்கும்
ஒரு ஆணுக்கும்
ஒரு பெரிய மோதல்! - அது
காதலைச் சொல்லப் புறப்பட்ட போது
ஏற்பட்ட மோதல்!
எந்தன் அப்பனாத்தை
சேர்த்து வைத்திருக்கும்
சொத்தில் மயங்கி விழுந்தாயா
என்கிறாள் பெண்!
என் உழைப்பில் மயங்கி விழுந்தாயா?
என்னை அடைந்தால்
எல்லாம் கிடைக்கும் என்று
நம்பி வந்தாயா என்கிறான் ஆண்!
மோதலின் பின் கொஞ்சம் புரிதலும்
ஏற்படத்தானே செய்யும்!
நீண்ட காலம் பழகியதன் விளைவு
இப்படித்தான் இருக்கும் என்று
நான் அறிந்திருக்கவில்லை!
என் மீது தப்புக் கணக்கா
உன் மீது தப்புக் கணக்கா
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!
என் எதிர்பார்ப்பு இவ்வளவுதான்
அதுபோல
உன் எதிர்பார்ப்பும் இருக்குமாயின்
என் உழைப்பில் மயங்கி விழுந்தாயா?
என்னை அடைந்தால்
எல்லாம் கிடைக்கும் என்று
நம்பி வந்தாயா என்கிறான் ஆண்!
மோதலின் பின் கொஞ்சம் புரிதலும்
ஏற்படத்தானே செய்யும்!
நீண்ட காலம் பழகியதன் விளைவு
இப்படித்தான் இருக்கும் என்று
நான் அறிந்திருக்கவில்லை!
என் மீது தப்புக் கணக்கா
உன் மீது தப்புக் கணக்கா
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!
என் எதிர்பார்ப்பு இவ்வளவுதான்
அதுபோல
உன் எதிர்பார்ப்பும் இருக்குமாயின்
இணைந்து பயணிக்கலாம் என்று
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!
ஒரு கணப்பொழுது மௌனத்தின் பின்
ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டதற்குச் சான்றாக
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்!
அடுத்தது என்ன?
அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது!
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!
ஒரு கணப்பொழுது மௌனத்தின் பின்
ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டதற்குச் சான்றாக
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்!
அடுத்தது என்ன?
அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது!