யார்க்கெடுத்து நாமுரைப்போம்!
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
தொற்றுநோய்தான் காற்றிலிடக் குப்பைதான் போடுவார்தான்
கற்றவரும் மற்றவரும் தான்தெருவில் போடுவார்தான்
யார்தான் அயலாரும் தான்தமிழர் என்றுணர்வார்
யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.
பேச்சிலதான் தேன்போலத் தித்திக்கச் சொல்லலாமே
பேச்சிலதான் நல்லுறவும் தான்பிரியத் திட்டலாமே
யார்தான் உணர்ந்தும்தான் நற்றமிழில் பேசுகின்றார்
யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.
வெளியீடு சொல்லவேணும் ஈழவரின் ஆக்கமென்று
நம்எழுத்துச் சொல்லவேணும் நம்மவரின் நற்பெயரை
யார்தான் பிறமொழி சேர்த்தெழு தாதவராம்
யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.
அடையாளம் சொல்லவேணும் நாம்ஈழத் தாரென்றாம்
நம்பேச்சுச் சொல்லவேணும் நம்தமிழ்வ ளம்இதுவாம்
யார்தான் செயலளவில் தாம்கடைப்பி டிக்கிறாராம்
யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.
தமிழர் அடையாளம் தான்அழியப் போகிறதே
நம்தமிழ் தன்வளம் குன்றத்தான் போகிறதே
யார்தான் கணக்கில் எடுத்துணர்ந்து ஒன்றிணைவார்
யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.