| Translate Tamil to any languages. |
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
திங்கள், 9 ஆகஸ்ட், 2021
ஆண்களுக்கு ஒரு புண், பெண்களுக்கு இரு புண்
காதல் இயற்கையாக அமைந்தால்
காதலில் பிரிவே கிடையாதாம் - அந்த
காதலர்களுக்குச் சோதிடத்திலும்
குறிப்பேதும் பார்க்காமல் பொருந்துமாம்!
தாளில் அம்பு செய்து
எய்துவிட்டால் காதல் வரும்
பள்ளிப் பருவத்தில் தான்…
கண்ணடித்தால் காதல் வரும்
பாடல்களில் தான்…
அழகைக் காட்டியதும் - தங்க
அணிகலனைக் காட்டியதும் - நாலு
காசைக் காட்டியதும் மதிமயங்கி
காதல் ஊற்றெடுத்தும் வரும்
திரைப்படப் பாணியில் தான்…
இப்பவெல்லாம்
இயற்கைக் காதல் இங்கில்லை
மணமுறிவு போல காதல் முறிவு
மலிஞ்சு போச்சுக் காணும்!
தங்கள் தங்கள் விருப்படைய
காதலை ஊடகமாக்கினால்
பின் விளைவுகள் சொல்லிலடங்காதே!
மண், பெண், பொன் விருப்படைய
காதலிப்பதாய் ஆண்களும்
எடுப்புக்கு (Styleக்கு), வருவாய் ஈட்டலுக்கு
காதலிப்பதாய் பெண்களும்
ஒருவரை ஒருவர் ஏமாற்றியதால்
காதல் தோல்வியாம் - விளைவாக
ஆண்களுக்கு ஒரு புண்ணும்
(உள்ளப் புண் மட்டும்)
பெண்களுக்கு இரு புண்ணும்;
(உள்ளப் புண்ணும் கருப்பைப் புண்ணும்)
ஏற்பட்ட பின்னரே - அவர்களுக்கு
மூளையே வேலை செய்ததாம்!
காலம் கடந்து அறிவு வந்தும்
பயனேதும் தரப் போவதில்லையே!!
காதல் புனிதமானது தான் - அது
திருமணமே இலக்கு - அதற்குப் பின்
இருவர் உள்ளத்து எதிர்பார்ப்புமென
காதலிப்போருக்கு மட்டுமே போருந்தும்!
காதலித்த பின்னர்
திருமணத்திற்காகப் போராடிய
காதலர் இலக்கியங்கள் சொல்லுமே!
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

